மனம் போன போக்கில்

Archive for ஆகஸ்ட் 2009

மீமா?

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 31, 2009

‘பீமா’வைத்தான் தவறுதலாக எழுதிவிட்டார்களா, அல்லது ‘மீமா’ என்ற பெயரில் ஒரு புதுப்படம் வந்திருக்கிறதா??? (பெங்களூர் – ஓசூர் நெடுஞ்சாலை : 30 08 2009) *** என். சொக்கன் … 31 08 2009

கொஞ்சம் குழப்பம், நிறைய கோழைத்தனம்

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 31, 2009

சென்ற சனிக்கிழமை ஒரு முக்கியமான வேலையாக எம். ஜி. ரோடு பழைய புத்தகக் கடைகளுக்கு திக்விஜயம். மூன்று பைகளில் புத்தகங்களை நிறைத்துக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினேன். வழக்கமாக நான் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவுடன் ஏதாவது ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டுவிடுவேன். பெங்களூரில் சைக்கிள்முதல் லாரிவரை சகல வாகனங்களும் டிராஃபிக் நெரிசலில் நின்று நின்று ஊர்வதுதான் வழக்கம் என்பதால், ஒரு மணி நேரப் பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 20 முதல் 30 பக்கங்கள்வரை படித்து முடித்துவிடலாம். அன்றைக்கு, ஆட்டோ [...]

கைதட்டல்கள்

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 24, 2009

’கலைஞன்’ என்ற படத்தில், கமலஹாசன் ஒரு நடனக் கலைஞராக வருவார், ‘கலைஞன் கட்டுக் காவல் விட்டோடும் காற்றைப்போல, சிறிய வட்டத்துக்குள் நிற்காத ஊற்றைப்போல’ என்று ECG கிராஃப்போல ஏறி ஏறி இறங்குகிற ட்யூனுக்குள் வாலி ஒளித்துவைத்த வரிகளை SPB குரலில் பாடி ஆடிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று சின்ன வயது ஞாபகம் வந்துவிட, துள்ளலெல்லாம் மறந்து மேடையிலேயே அத்தனை ரசிகர்கள் முன்னிலையில் உணர்ச்சிவயப்பட்டு விசும்ப ஆரம்பித்துவிடுவார். அப்புறம் சில நிமிடங்கள் கழித்து சுதாரித்துக்கொள்ளும் கமல், நிலைமையைச் சமாளிப்பதற்காக ஒரு பிட்டைப் [...]

பிள்ளையாருக்குப் பொறந்தநாள்

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 23, 2009

இது எங்க வீட்டுப் பிள்ளையார் – விளையாட்டுக் களிமண் (Funskool Play-Doh) கொண்டு நங்கை செய்தது – கொஞ்சம் உற்றுக் கவனித்தால் பிள்ளையாருடன் மூஞ்சூறு, கொழுக்கட்டை (இனிப்பு தனி, காரம் தனி), லட்டு, பாயசம், அதில் மிதக்கும் முந்திரிப்பருப்பு, வடை, சுண்டல், அப்பம் முதலானவற்றைப் பார்க்கலாம். பிள்ளையார்தான் கொஞ்சம் கிறிஸ்துமஸ் தாத்தா சாயலில் இருக்கிறார், அதனால் என்ன? ஹேப்பி பர்த்டே பிள்ளையார்! *** என். சொக்கன் … 23 08 2009

சர்வமும் நோக்கியா

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 21, 2009

இந்தியாவில் மொபைல் ஃபோன் அல்லது ப்ரீபெய்ட் கரன்ஸி வகையறாக்கள் விற்காத கடை எதுவும் மிச்சமிருக்கிறதா? (இந்தப் புகைப்படம் குர்காவ்னில் எடுத்தது – 20 ஆகஸ்ட் 2009) *** என். சொக்கன் … 21 08 2009

ஒருக்கால் அப்படி இருக்குமோ?

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 19, 2009

முந்தாநாள் டாக்டர்களைப்பற்றி லேசாகக் கிண்டலடித்து எழுதியதன் நல்லூழ், அதே நாளில் ஒரு சின்னஞ்சிறிய விபத்தில் சிக்கிக்கொண்டேன். எங்கள் அலுவலகத்துக்கு நேர் எதிரே ஓர் அகன்ற சுற்றுச்சாலை (100 Feet Ring Road) உண்டு. அந்தச் சாலையைக் கடந்தால்தான் நான் வீட்டுக்குப் போகமுடியும். இதனால், தினமும் காலையில் அலுவலகம் வரும்போது ஒன்று, மதியம் சாப்பிடச் செல்லும்போது இரண்டு, மாலையில் வீடு திரும்புகையில் ஒன்று எனக் குறைந்தபட்சம் நான்குமுறை நான் அந்தச் சாலையைத் தாண்டியே தீரவேண்டும். வேறு குறுக்கு வழிகள் [...]

இளம் டாக்டர்

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 17, 2009

நேற்று மதியம் இரண்டரை மணி, கதவு மெதுவாகத் தட்டப்பட்டது, திறந்து பார்த்தால் இன்னும் மீசை முளைக்காததுபோன்ற தோற்றத்தில் ஓர் இளைஞன், ‘ஹலோ’ என்றான். ‘ஹலோ?’ ‘நாங்க மேலே 201க்குப் புதுசாக் குடிவந்திருக்கோம், என் பேர் ஜேம்ஸ்’ ‘ஓகே?’ ’எங்க வீட்ல ஒரு சின்ன எலக்ட்ரிக்கல் ப்ராப்ளம், உங்களுக்குத் தெரிஞ்ச எலக்ட்ரீஷியன்ஸ் யாராச்சும் இருக்காங்களா?’ டைரியைப் புரட்டித் தேடி நம்பரைக் குறித்துக்கொடுத்தேன், ‘ஆனா இவருக்குக் கன்னடம்மட்டும்தான் பேச வரும்’ ‘பரவாயில்லைங்க, ஐ கேன் மேனேஜ்’ என்றான் அவன், ‘ரொம்ப [...]

‘ரதன் டாடா’ நூல் விமர்சனம்

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 15, 2009

எனது ‘ரதன் டாடா’ புத்தகத்தின் விமர்சனம்: ’வாரணம்’ தளத்திலிருந்து: ரத்தன் நவல் டாடா, சுருக்கமாக ரத்தன் டாடா. இந்தியத் தொழிற் துறையின் பீஷ்மர். ஆனால், ஒட்டுமொத்த டாடா குழுமத்தை உருவாக்கியது அவரில்லை. நூற்றாண்டு கண்ட நிறுவனமான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவர். ஆனால், 1962 ஆம் ஆண்டு அவர் டாடா ஸ்டீலில் ஒரு பயிற்சிபெறும் ஊழியர். ஒரு கடை நிலை ஊழியர், அந்நிறுவனத்தின் தலைவரா? எப்படி? இதை சுவாரசியமான ஒரு புத்தகமாக தந்துள்ளார் என்.சொக்கன். புத்தகம் எதோ ரத்தன் டாடாவைப் பற்றி இருந்தாலும், நூறாண்டு கண்ட டாடா [...]

வகைவகையாப் பிள்ளையார்

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 14, 2009

பெங்களூர் விநாயக சதுர்த்திக்குத் தயாராகிறது *** என். சொக்கன் … 14 08 2009

கண்ணன் பிறந்தான்

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 13, 2009

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்) பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்) குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் [...]

ட்டூ மினிட்ஸ்

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 10, 2009

ஒரு மாதம் முன்பாக, அவர் என்னைத் தேடி வந்திருந்தார். அவர் பெயர் ஸ்ரீமதி. ஆறு மாதங்களுக்குமுன்புவரை எங்களுடன் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். சில தனிப்பட்ட காரணங்களால் பணியிலிருந்து விலகிவிட்டார். இப்போது, அவருக்கு இன்னோர் இடத்தில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. இங்கே அவர் வாங்கிக்கொண்டிருந்ததைப்போல் இருமடங்குக்குமேல் சம்பளம், வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள், இன்னபிற சவுகர்யங்கள். ஆனால், நான்கு சுற்று நேர்முகத்தேர்வுகளுக்குப்பிறகும், அந்த நிறுவனம் ஸ்ரீமதியின் வேலை நியமனத்தை இன்னும் உறுதி செய்யவில்லை. அதற்குமுன்னால், அவருடைய முந்தைய பணியிடத்தில் உள்ள சிலரின் [...]

’நடை’யர்கள்

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 6, 2009

ஒரு வாரமாக, அலுவலகம் போகிற வழியில் தினந்தோறும் அந்தக் காட்சியைத் தவறாமல் பார்க்கிறேன் – அதிகப் போக்குவரத்து இல்லாத எங்கள் தெருவின் சிமென்ட் சாலையில் மூன்று பேர் நடை பழகுவதுபோல் முன்னே, பின்னே மாறி மாறி நடந்துகொண்டிருக்கிறார்கள். பெங்களூரின் ஒவ்வொரு தெருவிலும் எந்நேரமும் ஏதாவது ஒரு வீடு கட்டிக்கொண்டிருப்பார்கள். புது வீடாக இல்லாவிட்டாலும், இருக்கும் பழைய வீட்டை இடித்துக் கட்டுவார்கள், அல்லது ஒரு மாடி சேர்ப்பார்கள், இருப்பதைப் புதுப்பித்து அழகுபடுத்துவார்கள், இதை அதாகவும் அதை இதாகவும் மாற்றுவார்கள், [...]

ஏதாச்சும் ரெண்டு மிருகம்

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 3, 2009

வழக்கம்போல், சாப்பாட்டுத் தட்டு முன்னே வைக்கப்பட்டதும் ‘அப்பா ஒரு கதை சொல்லுப்பா’ என்று ஆரம்பித்தாள் நங்கை. ‘நீ சாப்பிடு, நான் சொல்றேன்’ ‘நீ சொல்லு, நான் சாப்பிடறேன்’ ‘சரி, உனக்கு என்ன கதை வேணும்?’ ’ம்ம்ம்ம்ம்’ என்று கொஞ்ச நேரம் உம் கொட்டிக்கொண்டு யோசித்தவள் கடைசியில், ‘பாம்பும் பூனையும்’ என்றாள். எங்கள் வீட்டில் இது ஒரு புதுப் பழக்கம். தினமும் ராத்திரிச் சாப்பாட்டு நேரத்தில் நானோ என் மனைவியோ ஒரு கதை சொல்லவேண்டும், அதுவும் நங்கை தேர்ந்தெடுக்கிற [...]

ஏ. ஆர். ரஹ்மான் புத்தக அறிமுக நிகழ்ச்சி

Posted by: என். சொக்கன் on: ஆகஸ்ட் 1, 2009

நாளை (2 ஆகஸ்ட் 2009, ஞாயிறு) மதியம் 12 மணிக்கு, ஆஹா FM வானொலி(91.9)யின் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது ஏ. ஆர். ரஹ்மான் புத்தகம்பற்றிய அறிமுகம் / கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கி என்னுடன் உரையாடியவர்: திரைத்துறை ஆய்வாளர், எழுத்தாளர் திரு. பா. தீனதயாளன். தொலைபேசிவழியே திரு. ஐகாரஸ் பிரகாஷ், பாடகி ஸ்ரீமதுமிதா ஆகியோரும் பங்கேற்றார்கள். சுவாரஸ்யமான இந்த அரட்டையின் வழியே, ’ரோஜா’வுக்கு முன்பிருந்து, ஸ்லம்டாக் மில்லியனர்’வரையிலான ரஹ்மானின் இசைப் பயணத்தைத் தொட்டுச்சென்றிருக்கிறோம். நிகழ்ச்சியின் [...]


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 101 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 183,725 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

ஆகஸ்ட் 2009
தி செ பு வி வெ ஞா
« ஜூலை   செப் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Follow

Get every new post delivered to your Inbox.

Join 101 other followers