மனம் போன போக்கில்

Archive for நவம்பர் 2009

வீரவநல்லூர்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 26, 2009

வீரவநல்லூரைப்பற்றிய கவிதை கண்டிப்பாக எழுதவேண்டும்   முதல்வரியாக ‘அந்தக் காலத்தில் குளத்தில் நீர் இருந்தது’, இரண்டு மூன்று வரிகளுக்குப் பின் சண்முகா கொட்டகையையும் காந்திமதி டாக்கீஸையும். ஊரின் செழுமைக்கு சந்தையில் மண்டிக்கிடந்த காய்கறிக் கூழ் கொஞ்சம். மழை வர்ணனையும் தெருவில் திரிந்த பசுக்கள்பற்றிய குறிப்பும் அவசியம். ஊர்ச்சாத்திரை, திரைகட்டிப் படம், சின்ன வயதில் சைக்கிள் ஓட்டிய கதை, கூனியூருக்குச் செல்லும் பாதை, சுமைதாங்கிக் கல், பள்ளிக்கூடம், பொது நூலகம் எனத் தேடிப் பிடித்து வார்த்தைகளை வளைத்தால் வீரவநல்லூரின், [...]

ஐன்ஸ்டீனும் அஞ்சு வரியும்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 26, 2009

குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஐன்ஸ்டீன்பற்றிய புத்தகம் ஒன்றில், இந்த நகைச்சுவைக் கவிதையைப் படித்தேன் (லிமரிக்-தானே இது?) There was a young lady named Bright Who travelled much faster than light, She started one day In the relative way And returned on the previous night இது கொஞ்சம் அதீத எளிமைப்படுத்தலாகத் தோன்றலாம். ஆனால் அஞ்சு வரியில் ரிலேட்டிவிட்டியை முழுசாக விளக்கிவிடமுடியுமா என்ன? போகட்டும். இந்த லிமரிக்கைத் தமிழில் மொழிபெயர்க்கமுடியுமா? [...]

எட்டு வருஷ அனுபவம்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 9, 2009

இன்று காலை, தாய்லாந்திலிருந்து ஒரு வாடிக்கையாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், ‘எங்களுக்கு ஒரு ப்ரொக்ராமர் / கன்சல்டன்ட் தேவைப்படுகிறார். அவருக்குக் கீழ்கண்ட டெக்னாலஜிகளில் குறைந்தபட்சம் எட்டு வருட அனுபவம் இருக்கவேண்டும்!’ அவர்கள் கொடுத்திருந்த பட்டியலை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தேன். அநேகமாகச் சூரியனுக்குக் கீழே உள்ள சகல தொழில்நுட்பங்களையும் லிஸ்ட் போட்டிருந்தார்கள். இத்தனையிலும் எட்டு வருட அனுபவம் உள்ள ஒருவரைத் தேடவேண்டுமென்றால், மகாவிஷ்ணு மறுபடியும் அவதாரம் எடுத்துவந்தால்தான் உண்டு. உடனடியாக, என் அலுவலக நண்பரைத் தொலைபேசியில் அழைத்தேன், ‘என்னய்யா இப்படிப் [...]

குழந்தைப் பேச்சு

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 5, 2009

’ஹலோ, மணி ஏழே கால், எல்லோரும் எழுந்திருங்க’ எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. அது என் தர்ம பத்தினியுடையது. மனைவி சொல் மீறிய பாவம் எனக்கு வேண்டுமா? சட்டென்று போர்வையை உதறிவிட்டு பத்மாசன போஸில் எழுந்து உட்கார்ந்தேன். உள்ளங்கைகளைத் தேய்த்து உம்மாச்சி பார்த்தேன். பக்கவாட்டுச் சுவரில் பிள்ளையார் தரிசனம், கழுத்தை எண்பது டிகிரி திருப்பினால் ராமரும் சீதையும், லட்சுமணன், அனுமனோடு, ஒரு காலைக்கு இத்தனை பக்தி போதும், எழுந்துகொண்டேன். மிகத் துல்லியமாக அதே விநாடியில் (முதல், [...]


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 101 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)


ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 183,725 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

இது புதுசு










ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

பக்கங்கள்

 

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« அக்   Dec »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Follow

Get every new post delivered to your Inbox.

Join 101 other followers