Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 29, 2010
நம்முடைய ஊடகங்களில் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறைபற்றி இரண்டுவிதமான பிம்பங்களே உள்ளன. ஒன்று, ‘இங்கே நுழைந்தால் லட்சங்களில் சம்பளம் அள்ளலாம், உலகைச் சுற்றிவரலாம், கோடிகளில் சேமித்து ’பில் கேட்ஸ்’ மாதிரியோ ‘சிவாஜி’ ரஜினிமாதிரியோ சமூக சேவை செய்யலாம். எட்ஸட்ரா எட்ஸட்ரா’. இன்னொன்று ‘ஐடில நுழைஞ்சுட்டா ராத்திரி, பகல் கிடையாது, பொண்டாட்டி, புள்ளயோட நேரம் செலவிடமுடியாது, கண்ணு கெட்டுப்போகும், தூக்கமில்லாம உடம்பு கெட்டுப்போகும், உட்கார்ந்த இடத்தில வேலை பார்க்கறதால முப்பது வயசுல ஹார்ட் அட்டாக் வரும், அப்புறம் மூச்சு [...]
Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 18, 2010
’போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னப்பா?’ தொலைபேசி தவிர்த்த வேறெந்தத் தகவல் தொடர்பு சாதனத்தையும் அறியாத ஆறரை வயதுப் பெண்ணுக்குத் தபால் பெட்டியை எப்படி விளக்கிச் சொல்வது. ராஜேந்திரகுமார் ஞாபகத்தோடு ‘ஙே’ என விழித்தேன். சற்று நேரம் கழித்து நங்கை மீண்டும் கேட்டாள். ‘உன்னைத்தான்ப்பா கேட்டேன், போஸ்ட் பாக்ஸ்ன்னா என்ன?’ ’போஸ்ட் பாக்ஸ்ன்னா சிவப்பா உயரமா வட்டமா சிலிண்டர்மாதிரி இருக்கும், செவுத்தில மாட்டிவெச்சிருப்பாங்க, அதுக்குள்ள லெட்டரெல்லாம் போடுவாங்க.’ ’செவுத்தில-ன்னா என்ன? லெட்டர்-ன்னா என்ன?’ ‘கொஞ்சம் பொறு. ஒவ்வொரு கேள்வியா வருவோம். [...]
Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 8, 2010
இன்று மாலை 5:30 மணி(இந்திய நேரம்)க்குக் ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் ‘பணம் வரும் நேரம்’ நிகழ்ச்சியில் என்னுடைய (தொலைபேசிப்) பேட்டி ஒன்று ஒளிபரப்பாகிறது. ஆனால், இந்தப் பேட்டி பணம் பற்றியதல்ல. ஹமீஷ் மெக்டொனால்ட் எழுதிச் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘Ambani & Sons’ புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் அல்லது விமர்சனம். வாய்ப்புள்ளவர்கள் பார்த்துகேட்டுவிட்டுச் சொல்லவும். எனக்கு வாய்ப்பில்லை *** என். சொக்கன் … 08 10 2010