மனம் போன போக்கில்

Archive for the ‘Uncategorized’ Category

வீரவநல்லூர்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 26, 2009

வீரவநல்லூரைப்பற்றிய கவிதை கண்டிப்பாக எழுதவேண்டும்
 
முதல்வரியாக ‘அந்தக் காலத்தில் குளத்தில் நீர் இருந்தது’,
இரண்டு மூன்று வரிகளுக்குப் பின்
சண்முகா கொட்டகையையும் காந்திமதி டாக்கீஸையும்.
ஊரின் செழுமைக்கு
சந்தையில் மண்டிக்கிடந்த காய்கறிக் கூழ் கொஞ்சம்.
மழை வர்ணனையும்
தெருவில் திரிந்த பசுக்கள்பற்றிய குறிப்பும் அவசியம்.
ஊர்ச்சாத்திரை, திரைகட்டிப் படம்,
சின்ன வயதில் சைக்கிள் ஓட்டிய கதை,
கூனியூருக்குச் செல்லும் பாதை, சுமைதாங்கிக் கல்,
பள்ளிக்கூடம், பொது நூலகம் எனத் தேடிப் பிடித்து
வார்த்தைகளை வளைத்தால்
வீரவநல்லூரின், எந்தவொரு ஊரின்
பழைய பொதுப்பிம்பம் தயாராகும்.
ஒரு ஊரைக் கவிதையில் சேமிப்பது சுலபம்.
(ஹரன் பிரசன்னா எழுதிய ‘நிழல்கள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து – [...]

ஐன்ஸ்டீனும் அஞ்சு வரியும்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 26, 2009

குழந்தைகளுக்காக எழுதப்பட்ட ஐன்ஸ்டீன்பற்றிய புத்தகம் ஒன்றில், இந்த நகைச்சுவைக் கவிதையைப் படித்தேன் (லிமரிக்-தானே இது?)
There was a young lady named Bright
Who travelled much faster than light,
She started one day
In the relative way
And returned on the previous night
இது கொஞ்சம் அதீத எளிமைப்படுத்தலாகத் தோன்றலாம். ஆனால் அஞ்சு வரியில் ரிலேட்டிவிட்டியை முழுசாக விளக்கிவிடமுடியுமா என்ன?
போகட்டும். இந்த லிமரிக்கைத் தமிழில் மொழிபெயர்க்கமுடியுமா? வடிவம் கெடாமல் செய்தால் சந்தோஷம், இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் [...]

எட்டு வருஷ அனுபவம்

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 9, 2009

இன்று காலை, தாய்லாந்திலிருந்து ஒரு வாடிக்கையாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், ‘எங்களுக்கு ஒரு ப்ரொக்ராமர் / கன்சல்டன்ட் தேவைப்படுகிறார். அவருக்குக் கீழ்கண்ட டெக்னாலஜிகளில் குறைந்தபட்சம் எட்டு வருட அனுபவம் இருக்கவேண்டும்!’
அவர்கள் கொடுத்திருந்த பட்டியலை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தேன். அநேகமாகச் சூரியனுக்குக் கீழே உள்ள சகல தொழில்நுட்பங்களையும் லிஸ்ட் போட்டிருந்தார்கள். இத்தனையிலும் எட்டு வருட அனுபவம் உள்ள ஒருவரைத் தேடவேண்டுமென்றால், மகாவிஷ்ணு மறுபடியும் அவதாரம் எடுத்துவந்தால்தான் உண்டு.
உடனடியாக, என் அலுவலக நண்பரைத் தொலைபேசியில் அழைத்தேன், ‘என்னய்யா இப்படிப் படுத்தறானுங்க, இவ்ளோ [...]

குழந்தைப் பேச்சு

Posted by: என். சொக்கன் on: நவம்பர் 5, 2009

’ஹலோ, மணி ஏழே கால், எல்லோரும் எழுந்திருங்க’
எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. அது என் தர்ம பத்தினியுடையது.
மனைவி சொல் மீறிய பாவம் எனக்கு வேண்டுமா? சட்டென்று போர்வையை உதறிவிட்டு பத்மாசன போஸில் எழுந்து உட்கார்ந்தேன். உள்ளங்கைகளைத் தேய்த்து உம்மாச்சி பார்த்தேன். பக்கவாட்டுச் சுவரில் பிள்ளையார் தரிசனம், கழுத்தை எண்பது டிகிரி திருப்பினால் ராமரும் சீதையும், லட்சுமணன், அனுமனோடு, ஒரு காலைக்கு இத்தனை பக்தி போதும், எழுந்துகொண்டேன்.
மிகத் துல்லியமாக அதே விநாடியில் (முதல், இரண்டாவது, மூன்றாவது ‘உலுக்கல்’களுக்குப்பிறகு [...]

நடமாடும் சலூன்

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 29, 2009

’அப்படியே தூக்கிட்டுப் போய் எங்க வேணும்ன்னாலும் வெச்சு வெட்டலாம்-ங்க’ என்றார் கடைக்காரர் – தலைமுடியைதான் சொல்லியிருப்பார் என நம்புகிறேன்.
(பெங்களூர் – 25 அக்டோபர் 2009 – மாலை 4:16)

***
என். சொக்கன் …
29 10 2009

அர்த்த(மில்லாத) ஜாமம்

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 28, 2009

நேற்று இரவு (அல்லது அதிஅதிகாலை) இரண்டு பதினெட்டுக்கு எனக்கு ஓர் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி வந்தது:
நண்பர்களே, ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம்ம சத்யமூர்த்திக்கு மகன் பிறந்திருக்கிறான். தாய், சேய் நலம். இப்படிக்கு, மனோஜ்குமார்
சத்யமூர்த்தி, மனோஜ்குமார் இருவரும் நல்ல நண்பர்கள், எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் சக ஊழியர்கள்.
மனோஜ்குமாரின் எஸ்.எம்.எஸ். வந்தபோது நான் செம தூக்கத்தில் இருந்தேன். ஆனாலும் அந்த ‘டொய்ங் டொய்ங்’ சத்தத்தில் விழிப்பு வந்துவிட்டது. மப்பு கலையாமலே தலைமாட்டில் இருக்கும் செல்ஃபோனை இயக்கிச் செய்தியைப் படித்தேன், சந்தோஷம்.
அதோடு, [...]

ஏழாவது அவதாரம்

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 16, 2009

நான் எழுதிய Infosys நாராயணமூர்த்தி வாழ்க்கை வரலாறு தற்போது ஹிந்தியில் வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்தவர்: மகேஷ் ஷர்மா. வெளியீடு: பிரபாத் பிரகாஷன் (நியூ ஹொரைசான் மீடியா வழியாக), டெல்லி. விலை: ரூ 200/-

’நாராயண’மூர்த்தி என்று பெயர் வைத்ததால்தானோ என்னவோ, ஏற்கெனவே இந்தப் புத்தகம் தமிழில் மூன்று, ஆங்கிலத்தில் இரண்டு, மலையாளத்தில் ஒன்று என ஐந்து ஆறு அவதாரங்கள் எடுத்திருக்கிறது. இப்போது ஏழாவதாக ஹிந்தி அவதாரம். இன்னும் மூன்றுதான் பாக்கி
… …
… [...]

ஊரைக் கெடுத்தவர்கள் யார்?

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 11, 2009

சென்ற வாரம் மும்பையில் அலுவலக நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.
’நான் குடியிருக்கிற வீட்டு ஓனருக்கு என்மேல பயங்கர கோவம்’
’ஏன், என்னாச்சு? வாடகை பாக்கி வெச்சுட்டீங்களோ?’
‘அதெல்லாம் இல்லை, எங்க வீட்ல ஒரு குழாய் ரிப்பேர், ப்ளம்பரைக் கூட்டிவந்து ரிப்பேர் செஞ்சேன்’
’இதுக்குப்போய் யாராச்சும் கோவப்படுவாங்களா?’
’கோவம் அதுக்கில்ல, ரிப்பேரைச் சரி செஞ்சதுக்கு அந்த ப்ளம்பர் நூத்தம்பது ரூபாய் கேட்டார், கொடுத்தேன், அதுதான் எங்க ஓனருக்குப் பிடிக்கலை’
‘ஏன்? உங்க காசைத்தானே கொடுத்தீங்க?’
‘ஆமாம், ஆனா இனிமே இந்த வீட்ல எந்தக் குழாய் [...]

தாண்டிச் சென்ற பஸ்

Posted by: என். சொக்கன் on: அக்டோபர் 1, 2009

அலுவல் நிமித்தம் மும்பை வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாள் இங்கேதான் ஜாகை.
பெங்களூரிலிருந்து விமானத்தில் மும்பை வருவதற்கு ஒன்றரை மணி நேரம்தான் ஆகிறது. ஆனால் எங்கள் வீட்டிலிருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று சேர்வதற்குச் சுத்தமாக இரண்டே கால் மணி நேரம்.
நேற்று மாலை, நானும் என் அலுவலக நண்பரும் விமான நிலையம் செல்கிற பேருந்துக்காகக் காத்திருந்தோம். சுவாரஸ்யமான அரட்டையில் நேரம் ஓடியதே தெரியவில்லை.
ஐந்தே முக்கால் மணிவாக்கில், எதேச்சையாக அவர் கடிகாரத்தைப் பார்த்தார், ‘யோவ், ரொம்ப லேட் ஆயிடுச்சுய்யா, [...]

ஓர் ஆச்சர்யம், ஒரு கேள்வி

Posted by: என். சொக்கன் on: செப்டம்பர் 29, 2009

நேற்று நங்கையைக் கூட்டிக்கொண்டு ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். வழியில் தென்பட்ட எல்லாப் பொருள்களைப்பற்றியும் நிமிடத்துக்கு ஏழெட்டு கேள்விகள் என்கிற விகிதத்தில் கேட்டபடி நடந்துவந்தாள், பதில்களை எதிர்பார்க்கக்கூட இல்லை.
கடையில் நாங்கள் வாங்கிய பொருள்களின் மொத்த விலை 56 ரூபாய் ஆனது. நான் அறுபது ரூபாய் கொடுத்தேன்.
‘ஒர் ரூவா சில்லறை கொடுங்க சார்’
பர்ஸுக்குள் தேடினேன். ஒற்றை நாணயம் எதுவும் அகப்படவில்லை, ‘இல்லைங்களே’
‘சரி, அப்ப நாலு ரூபாய்க்கு ஏதாச்சும் வாங்கிக்கோங்க’
‘ஓகே, ஏதாவது சாக்லெட் கொடுங்களேன்’
‘ம்ஹூம்’ என்று மறுத்துவிட்டார் அவர், ‘எங்க கடையில [...]


ஹையா, ஜாலி ஜாலி!

கிழக்கு பாட்காஸ்ட்

இதுவரை

  • 70,837 வருகைகள், நன்றி!

இது புதுசு



ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

விளம்பரங்கள்

சிநேகிதங்களை அறிமுகப்படுத்தினா இலவசமா டி-ஷர்ட்டு தர்றாங்களாம் ...



மெயில் படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?



எஸ்.எம்.எஸ். படிக்கக் காசாமே ... மெய்யாலுமா?




கருத்தைச் சொன்னா காசு தர்றாங்களாமே


பக்கங்கள்

 

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« அக்    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30