Archive for December 9th, 2008
நவீன மனுநீதி
Posted December 9, 2008
on:- In: Change | Fun | Humor | Kids | Play | Uncategorized
- 15 Comments
’அப்பா, நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’
’சொல்லும்மா’
‘இது நம்ம ப்ளெங்கூர் கதை இல்லை, தமிழ் நாட்டிலே நடந்தது, சரியா?’
‘ஓகே’
‘உனக்கு தமிழ் நாடு தெரியுமா? நம்ம தாத்தா இருக்கால்ல? அதுதான் தமிழ் நாடு, இது தமிழ் நாடு இல்லை, ப்ளெங்கூர்’
‘சரிம்மா, நீ கதையைச் சொல்லு’
’தமிழ் நாட்டில ஒரு ராஜா இருந்தாராம், அவர் பேரு … அவர் பேரு எனக்கு மறந்து போச்சு’
’பரவாயில்லை, வெறும் ராஜான்னு வெச்சுக்கலாம், நீ மேலே கதையைக் கவனி’
’அந்த ராஜாவுக்குக் குழந்தையே இல்லையாம், ரொம்ப நாள் கழிச்சு ஒரு குழந்தை பிறந்ததாம், பையன் குழந்தையாம்’
‘சரி’
‘அந்தக் குழந்தைமேல ராஜாவுக்கு ரொம்ப ஆசையாம், ஆனா அவன் சரியான நாட்டி பாய்’
’உன்னைமாதிரியா?’
‘நடுவில டிஸ்டர்ப் பண்ணாதேப்பா, கதை மறந்துடும்,. அந்த ராஜாவோட வீட்ல ஒரு பெரிய மணி கட்டியிருக்கும், டிங் டாங் பெல் புஸ்ஸீஸ் இன் தி வெல் பாட்டிலே வருமே, அந்தமாதிரி மணி’
‘ஓகே, அந்த மணி எதுக்கு?’
‘அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனா, ஒரு நாள் அந்த மணியை ஒரு மாடு முட்டிச்சாம்’
‘முட்டிச்சா, இல்லை அடிச்சுச்சா?’
‘முட்டிச்சுப்பா, உனக்குத் தெரியாது, நான் சொல்றேன் கேளு, மாடு மணியை முட்டிச்சா? ராஜா வந்து பார்த்தாராம், மாடு அவரை இழுத்துகிட்டுப் போச்சாம், காடு, மலையெல்லாம் கடந்து போனாங்களாம், கடைசியில பார்த்தா அங்கே ஒரு கன்னுக்குட்டி செத்துக் கிடந்ததாம்’
‘அச்சச்சோ, கன்னுக்குட்டிக்கு என்ன ஆச்சு?’
‘இந்த ராஜாவோட குழந்தை, ஒரு நாட்டி பையன் சொன்னேன்ல? அவன்தான் வேகமா டிராக் ஓட்டி இந்தக் கன்னுக்குட்டியைக் கொன்னுட்டான்’
‘ஓஹோ, உடனே ராஜா என்ன பண்ணார்?’
‘அவர் ஒண்ணுமே பண்ணலையாம்’
‘ஏய், நல்லா யோசிச்சுச் சொல்லு’
’எனக்குத் தெரியும்பா, நான் கதை சொல்லும்போது நீ டிஸ்டர்ப் பண்ணாதே, ஓகே?’
‘ஓகேம்மா, அப்புறம் அந்த மாட்டுக்கு என்ன ஆச்சு?’
’ராஜா எதுவும் பண்ண்லையா, அந்த மாட்டுக்குச் சரியான கோவம் வந்துச்சாம், நேராப் போய் அந்த நாட்டி பாயை முட்டிக் கொன்னுடுச்சாம்’
***
என். சொக்கன் …
09 12 2008