மனம் போன போக்கில்

திருடனுக்கு நன்றி

Posted on: December 16, 2008

எங்கள் அடுக்ககத்தில் நேற்று ஒரு சின்ன திருட்டுச் சம்பவம்.

காலை ஏழு மணியளவில் எல்லா வீட்டு வாசல்களிலும் பால் பாக்கெட்கள் போடப்படும். அவரவர் சோம்பேறித்தனத்தின் அடிப்படையில் மக்கள் எட்டு, எட்டரை, அல்லது ஒன்பது மணிக்கு அந்த பாக்கெட்களை உள்ளே எடுத்துச் செல்வார்கள்.

சனி, ஞாயிறு என்றால் நிலைமை இன்னும் மோசம், மாலை நாலு, ஐந்துவரைகூடப் பாக்கெட்கள் சில வீடுகளின் வாசலில் பரிதாபமாகக் கிடக்கும். அவற்றைப் பார்க்கையில், எனக்கு ஒரு விநோதமான கற்பனை தோன்றும். இப்போது கிளியோபாட்ரா உயிரோடு இருந்திருந்தால், நாம் ’Water Bed’டில் தூங்குவதுபோல், பால் நிரப்பப்பட்ட ‘Milk Bed’, ‘Milk Pillow’ செய்து தூங்குவாளோ?

அது நிற்க. திருட்டுச் சம்பவத்துக்கு வருவோம்.

ஏழு மணிக்குப் பால் பாக்கெட்கள் விநியோகம், ஆனால் எட்டு மணிக்குதான் மக்கள் அவற்றை எடுத்துச் செல்கிறார்கள். இதைக் கவனித்த எவனோ ஒருவன், ஏழே காலுக்கு உள்ளே புகுந்து, எல்லா பாக்கெட்களையும் திருடிச் சென்றுவிட்டான்.

அதன்பிறகு வாட்ச்மேனைக் கூப்பிட்டுச் சத்தம் போடுவது, அவருடைய Boss எவரோ அவரை அழைத்துக் கத்துவது என எல்லா சுப சடங்குகளும் அரங்கேறின. பால் பாக்கெட்கள் போனது போனதுதான்.

இன்று காலை, வழக்கமான நடை பயணத்துக்காக வெளியே வந்தபோது கவனித்தேன், எந்த வீட்டு வாசலிலும் பாக்கெட்கள் இல்லை, ‘எல்லாம் உடனே உள்ள எடுத்துட்டுப் போய்ட்டாங்க சார்’ என்றார் பால் காரர்.

திருடனுக்கு நன்றி. அவன் திருடியது பால் பாக்கெட்களைமட்டுமல்ல, எங்களுடைய சோம்பேறித்தனத்தையும்தான்!

***

என். சொக்கன் …

16 12 2008

8 Responses to "திருடனுக்கு நன்றி"

ஒரு நண்பர் கூகுள் சாட்டில் சொன்ன கமென்ட், ‘இந்தச் சுறுசுறுப்பெல்லாம் எத்தனை நாளைக்கு, அதையும்தான் பார்ப்போமே’

’திருட்டு’ வைராக்கியம்?

– என். சொக்கன்,
பெங்களூர்.

உங்கள் நண்பர் சொன்னது சரிதான்.

மதன் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார்:

“வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால்
வரலாற்றிலிருந்து நாம் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்.”

Experiance Makes Man…

not all persons… atleast some persons follow the good habit

because of the theif..

பால்காரன் பாலைப் போடாமலே பால போட்டதா சொல்லியிருப்பான்…………ஏன்னா அவனுக்குத்தான் எங்க எப்படி விக்கனும்னு தெரியும்………..எங்க ஏரியாவிலே இதான் நடந்தது………….

ஆதித்தன், புவனா,

நன்றி!

பாலாஜி,

ரொம்ப வருஷமா ஒரே பால்காரன்தான், இதுவரைக்கும் ஒரு கம்ப்ளைன்ட் இல்லை, So benefit of doubt goes to him 🙂

– என். சொக்கன்,
பெங்களூர்.

This is called positive thinking.

கலக்கல் தல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,479 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
%d bloggers like this: