Archive for January 29th, 2009
’மணிக்கொடி’யைத் தவறவிட்டவர்
Posted January 29, 2009
on:- In: Literature | Memories | Positive | Pulp Fiction | Puzzle | Uncategorized
- 10 Comments
சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் தென்பட்ட ஒரு தகவல் மிகவும் ஆச்சர்யம் அளித்தது.
அந்தப் புத்தகத்தைப்பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இப்போது அதிலிருந்து ஒரு சின்னப் பகுதிமட்டும் இங்கே:
சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடு வீட்டில் பட்டினி கிடந்த சமயம், பக்கத்துத் தெருவில் வசித்து வந்த பழம் பெரும் எழுத்தாளர் சி. சு. செல்லப்பாவிடம் தன் கதைகள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்திருந்தார். அதில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பல கதைகளும் கவிதைகளும் இருந்தன. பாராட்டிய செல்லப்பா, ‘நாளை உனக்கும் வாழ்க்கை மலரும்’ என்று சொல்லி, இரண்டனா பரிசு கொடுத்தாராம்.
அங்கே இங்கே என்று கதைகள் பிரசுரமாகி வந்தன. நின்று போயிருந்த ‘மணிக்கொடி’ என்ற இலக்கியப் பத்திரிகையை மறுபடி தொடங்க முயற்சி நடந்தது. ஆசிரியர் பி. எஸ். ராமையா இவரை அங்கே உதவி ஆசிரியராக வரும்படி அழைத்திருந்தார்.
ரொம்ப சந்தோஷமாக வேலைக்குப் புறப்பட்ட சமயம், எப்போதோ இவர் மனுப் போட்டிருந்த ஒரு வெள்ளைக்காரக் கம்பெனியிலிருந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்தது.
அங்கே போக வேண்டாம் என்று தீர்மானித்து, மணிக்கொடி ஆஃபீசுக்குப் போனார். ராமையாவிடம் சொன்னதும் அவர் கண்டபடி திட்டினாராம். ‘அவர் சொன்னபடியே நான் வெள்ளைக்காரக் கம்பெனியில் வேலை பார்த்தேன்’
பி. எஸ். ராமையாவால் திசை திருப்பப்பட்டு, ‘மணிக்கொடி’ எழுத்தாளராகும் வாய்ப்பை இழந்த அந்த இளைஞர், பின்னர் தனக்கென்று எழுத்துலகில் ஓர் இடத்தைப் பிடித்தார். ஏராளமான வாசகர் கூட்டத்தையும் சேர்த்துக்கோண்டார்.
ஆனால் இன்றைக்கு, அவர் பெயரையும், மணிக்கொடி என்கிற பெயரையும் அருகருகே குறிப்பிட்டால்கூட, தீவிர வாசகர்கள் கோபித்துக்கொள்வார்கள், அந்த அளவுக்கு ‘வேறுமாதிரி’யான எழுத்துகளுக்காகப் புகழ் பெற்றுவிட்டவர் அவர்.
யார் அந்த எழுத்தாளர்? உங்கள் ஊகங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! சரியான விடையை அடுத்த பதிவில் தருகிறேன்.
***
என். சொக்கன் …
29 01 2009