21 Responses to "மௌண மொளிகள்"

Tamil Puthaandu Vazthukkal.
What you’ve said is true. This kind of songs really irritate,better not to hear that like me.


சினிமாவுல தமிழ் மொழி “மொளி”யானது பற்றி வருத்தப்படுற நீங்க, சித்திரையில புத்தாண்டு வாழ்த்து சொல்றீங்க? தமிழ்ப் புத்தாண்டு தை மாதத்திற்கு மாறியதை ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லையோ? நீங்க தமிழ் இனம் இல்லையோ?. இது என்ன அலட்சியமா, இல்லை அகங்காரமா?


நல்ல பதிவு! கலைக்கென இருக்கவேண்டிய அதிகாரம்தான் இது. கலையை கலையாய் செழிக்க வைக்க ஒரு வழி.
பிரான்சில் ஒரு குழுவை அமைத்து அன்னிய மொழியிலிருந்து பிரெஞ்சுக்கு வரும் புதிய வார்த்தைகளை கட்டுப்படுத்துகிறார்கள் (எ.கா week-end).
இவ்வளவு செய்யும்போதே அவர்களின் மொழி கலப்படமாவதைப் பற்றி கவலை வேறு.நம் மொழி படும் சிரமத்தை என்ன என்று சொல்வது?


//அதற்கு வைரமுத்து சொன்ன பதில், ‘தமிழ் சாகாதவரை திருத்துவேன்’//
நெத்தியடியான பதில்.
எவ்வளவு பெரிய பாடகராக இருந்தாலும் தவறு செய்தால் திருத்துவதற்கு ஒரு தமிழறிஞர் வேண்டும்.
இங்கே எல்லாமே இப்போது கமர்சியல் ஆகிவிட்டது. அதனால் மவுனமொளி எல்லாம் இப்போது சஹஜமாகிவிட்டது.


//சினிமாவுல தமிழ் மொழி “மொளி”யானது பற்றி வருத்தப்படுற நீங்க, சித்திரையில புத்தாண்டு வாழ்த்து சொல்றீங்க? தமிழ்ப் புத்தாண்டு தை மாதத்திற்கு மாறியதை ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லையோ? நீங்க தமிழ் இனம் இல்லையோ?. இது என்ன அலட்சியமா, இல்லை அகங்காரமா?//
தமிழ் குடிமகன் அவர்களே! சொக்கன் உங்களுக்கு பதில் சொல்லிவிட்டார். அவரது எழுத்தில் இல்லாத அகங்காரம் உங்கள் மறுமொழியில் இருக்கிறது. அகங்காரமா என்று கேட்டதிலேயே அகங்காரம் தெரியவில்லை?
நான் சொல்லுகிறேன்; தமிழ் வருடப்பருப்பை நான் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆட்சி மாறினால், அது மீண்டும் சித்திரைக்கே வந்தாலும் வந்து விடும்.
தவிர, தமிழ் வருடத்தின் முதல் நாளை வருடப் பிறப்பென்று கொண்ட்டாமல் வேறு எப்படி சொல்வது?
தமிழ் மட்டுமல்ல இன்ன பிற இந்திய வருடப்பிறப்புகளும் மார்ச்/ ஏப்ரலிலேயே வருகின்றன. மத்தியில் ஆட்சி செய்தவர்கள் ஒரு சட்டம் போட்டு அவற்றையும் மாற்றியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?


ரசித்தேன் 🙂


உங்கள் பதிவுமனை முகவரியை என் இடுகையின் நட்பு வட்டாரத்தில் போட்டிருக்கிறேன்! 🙂


//சித்திரை 1, தை 1 இரண்டுமே கொண்டாடப்படவேண்டிய நாள்கள் என்பது என்னுடைய பழக்கம். இவற்றில் எது தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும் எனக்குச் சந்தோஷமே. இரண்டையும் தமிழ்ப் புத்தாண்டாக நினைத்தால்கூடத் தப்பில்லை என்றுதான் நான் சொல்வேன் – இதுபற்றி அநாவசிய அரசியல், காழ்ப்புணர்ச்சி வேண்டாம் என்று நினைக்கிறேன்//
சித்திரை முதல் நாள் – கொல்லம் ஆண்டின் புத்தாண்டு
தை முதல் நான் – திருவள்ளுவர் ஆண்டின் புத்தாண்டு
தமிழக அரசின் அதிகார பூர்வ நாட்காட்டி திருவள்ளுவர் ஆண்டு என்பதால் தை முதல் 1 தமிழ் புத்தாண்டு
அவ்வளவு தான் !!!


இது போல் சனவரி முதல் நாள் – கிரேகிரியன் நாட்காட்டியின் புத்தாண்டு. அதை ஆங்கில புத்தாண்டு என்று கூறுவது நாம் தான்
சித்திரை 1 – கொல்லம் புத்தாண்டு
தை 1 – திருவள்ளுவர் புத்தாண்டு
ஜனவரி 1 – கிரேகிரியன் புத்தாண்டு
இதில் கிரேகிரியன் புத்தாண்டை ஆங்கில புத்தாண்டு என்று அழைப்பது போல் எந்த புத்தாண்டை தமிழ் புத்தாண்டு என்று அழைக்க வேண்டும் ??
அரசு எந்த நாட்காட்டியை அதிகார பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறதோ, அதை கூறவேண்டியது தான்


தமிழக அரசு ஆணை கொல்லம் புத்தாண்டின் முதல் நாளை மாற்ற வில்லை
தமிழக அரசு ஆணை திருவள்ளுவர் புத்தாண்டின் முதல் நாளை மாற்ற வில்லை
சக ஆண்டு (இந்தியாவின் அதிகார பூர்வ நாள்காட்டியின்) முதல் நாள் – அதாவது இந்திய புத்தாண்டு என்று தெரியுமா
இந்திய அரசு கூட கொல்லம் ஆண்டை கடைபிடிக்க வில்லை
கொல்லம் ஆண்டை தவிர வேறு ஒரு ஆண்டுமுறையை (சக வருடம்) கடைபிடிக்கும் உரிமை இந்திய நடுவண் அரசிற்கு உள்ளது
கொல்லம் ஆண்டை தவிர வேறு ஒரு ஆண்டுமுறையை கடைபிடிக்கும் உரிமை ஆந்திர மாநில அரசிற்கு உள்ளது
கொல்லம் ஆண்டை தவிர வேறு ஒரு ஆண்டுமுறையை (திருவள்ளுவர் ஆண்டு) கடைபிடிக்கும் உரிமை தமிழக அரசிற்கு மட்டும் இல்லையா ??


சக ஆண்டு (இந்தியாவின் அதிகார பூர்வ நாள்காட்டியின்) முதல் நாள் – அதாவது இந்திய புத்தாண்டு என்று தெரியுமா
மார்ச் 22 (லீப் வருடங்களில் மார்ச் 21) !!! ஏப்ரல் 15 அல்ல !! (1956 முதல் இது தான் இந்திய புத்தாண்டு) இதை அறிமுகப்படுத்தப்பட்டது நேருவின் ஆட்சியில்.
இது தவிர ”இந்து புத்தாண்டு” என்று பாசகவினரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அது கூட ஏப்ரல் 14 கிடையாது.
http://www.rediff.com/news/mar/31cong.htm
Hindu new year’s day which is being observed on April 8 and 9.
http://www.rediff.com/news/apr/09flip.htm
The Hindu New Year’s Day fell on April 8 this year. The Bharatiya Janata Party celebrated appropriately.


பின் குறிப்பு
அலோபதி ஆங்கில மருத்துவம் – சித்தா தமிழ் மருத்துவம் ஆனது போல்
கிரேரியன் ஆண்டு ஆங்கில ஆண்டாக மாறியபோது தவறுதலாகவே கொல்லம் ஆண்டை தமிழ் புத்தாண்டாக பழக்க வழக்கத்தில் மாற்றிவிட்டார்கள்
தற்பொழுது திருவள்ளுவர் ஆண்டை தமிழ் ஆண்டாக கருத கூறுகிறார்கள். அவ்வளவு தான்


பாரதிய ஜனதா கூட ஏப்ரல் 14லை கொண்டாத போது, ஏதோ ஏப்ரல் 14ஐ தமிழ் புத்தாண்டு என்று கூறாவிட்டால் தெய்வ குற்றம் வந்து விடும் என்று சில “அறிஞர்கள்” ஊடகங்களில் பரப்புவது கண்டு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை
இந்தியாவிற்கு தனி புத்தாண்டு இருக்கிறது
இந்து புத்தாண்டு என்று தனியாக இருக்கிறது
தெலுங்கு புத்தாண்டு என்று தனியாக இருக்கிறது
இவ்வளவும் இருக்கும் போது தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடினால் அது தவறு கொல்லம் ஆண்டு தான் முக்கியம் என்று கூறுகிறார்களே, ஏன் ????
சத்தியமாக புரியவில்லை.
—


//பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’//
எந்த பாட்டு எந்த படம் …..


//சினிமாவுல தமிழ் மொழி “மொளி”யானது பற்றி வருத்தப்படுற நீங்க, சித்திரையில புத்தாண்டு வாழ்த்து சொல்றீங்க?//
அது கொல்லம் புத்தாண்டு.
// தமிழ்ப் புத்தாண்டு தை மாதத்திற்கு மாறியதை ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லையோ?//
கொல்லம் புத்தாண்டு மாறவில்லை சார். அது அப்படியேத்தான் இருக்கிறது. அதே போல் திருவள்ளுவர் புத்தாண்டும் மாறவில்லை. அதுவும் அப்படியே தான் இருக்கிறது
தமிழ அரசின் அதிகார பூர்வ புத்தாண்டு என்பது திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாளாக மாறியுள்ளது மட்டும் தான் நடந்துள்ளது


தமிழர்கள் ஜனவரி 14 நாளை கொண்டாடுவதற்கும், வட இந்தியர்கள் மார்ச் 22 கொண்டாடுவதற்கும் காரணம் இருக்கிறது !!
வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை என்றெல்லாம் புவியியல் பாடத்தில் இருக்கும், படித்தால் தெளிவு பெறலாம்


மிக அருமையானதொரு பதிவு.
நானும் எனது நண்பர்களும் இதைப்பற்றி பலமுறை புலம்பித் தள்ளியிருக்கிறோம். இப்போழுதுள்ள இளம் பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த உச்சரிப்பு பிரச்சினை இருக்கிறது என்பது ஒரு துரதிஷ்டமே. திருத்தங்கள் செய்வதற்கு பெரும்பாலும் பாடலாசிரியருக்கோ, இசையமைப்பாளருக்கோ சரியான உச்சரிப்பு தெரிய வேண்டுமென்பது அவசியமாகிறது. ‘ஸ்டைல்’ அல்லது ‘ட்ரெண்ட்’ என்கிற போர்வையில் தப்பான உச்சரிப்புகள் legitimate ஆகிவிடுகின்றன.
‘மயிலு’ படத்தின் பாடல் பதிவில் நடந்த அந்த நிகழ்ச்சி மிகவும் நுட்பமான ஒரு விஷயம். சிறிய விஷயமென்றாலும் ஒரு கலைஞன், தன் கலை மீது கொண்டிருக்கும் மதிப்பும், அக்கறையும் அதில் தெரியும்.
//இந்த ஒரே காரணத்துக்காக, இளையராஜாமீது ஆயிரம் குறை சொல்கிறவர்கள் இருக்கிறார்கள்//
இது மிகச்சரி! அவரிடம் சுதந்திரம் இல்லையென்று தூற்றுவார்கள்.
இதுவே ஒரு இயக்குனரோ அல்லது நடிகரோ, ஒரு காட்சி தான் நினைத்தப்படி வருவதற்கு பல முறை நடிக்க வைத்தார் (அல்லது நடித்துக் கொடுத்தார்) என்பதை மட்டும் பெருமையாக சொல்லுவார்கள். அது மட்டும் ‘டெடிகேஷன்’ என்று பொருள் கொள்ளப்படும்.
//ஆனால், எல்லாம் ஒழுங்காக வரவேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரம் இல்லை. கலைமீது இருக்கும் அக்கறை, தன்னுடைய படைப்பின்மீது இருக்கும் முனைப்பு. //..
சரியாகச் சொன்னீர்கள்! அந்த முனைப்பும் அக்கறையும் இன்று பலரிடம் இல்லை என்பது வருந்ததக்க விஷயம்.
ராம்ஜி சுப்ரமணியன்.


குட்டி சிஷ்யனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கையில், கிடதக (kitathka) என்று வாசிக்கச் சொன்னேன். அப்போது, அவனுக்கு நான்கு வயதிருக்கும். கிடகத என்று வாசித்தான்.
அப்படி வாசிக்கக்கூடாது என்றதும், கொஞ்சம் முயற்சித்துவிட்டு சற்று கொஞ்சலான குரலில், “மாஸ்டர்.. அத இப்பிடியே வெச்சுண்டுடலாமே” என்றான். மழலையின் ஆனந்தத்தில் சில நொடிகள் மகிழ்ந்தே போனாலும், ஒரு சொல் மாறாதிருப்பதன் அவசியம் பற்றி அவனுக்குப் புரியுமாறு சொன்னேன்.
குழந்தைக்குத் தோன்றும் கல்மிஷமில்லாத சுலப மார்க்கங்களை நெறிப்படுத்தாத ஆசிரியர் சமூகமும், வளர்ந்த பின்னும் இதே போதுமே.. இதையே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்ற மனோநிலையும் தகுதி திறங்களை இன்னும் கீழே இழுத்துச் சென்றபடி இருக்கிறது. தயாரிப்பாளரிலிருந்து தள்ளுவண்டிக்காரர் வரை க்வாலிட்டியில் காம்ப்ரமைஸ் செய்துகொள்வதைப்பற்றி எந்த கவைலையுமின்றி இருக்கிறார்கள்.
இன்று ஜூனியர் விகடனில் ’கறுஞ்சட்டை கருணாநிதி’ என்று எழுதியிருக்கிறார்கள்.

1 | Joe
April 14, 2009 at 1:30 pm
//
இதை இன்னொரு கோணத்திலிருந்து யோசித்தால், இன்றைய சினிமாவில் பாடுகிறவர்கள், இசையமைப்பவர்கள் எல்லோரும் இளைஞர்கள். அவர்கள் தலைமுறைக்கு ‘நல்ல தமிழ்’ முழுமையாக அறிமுகமாகவில்லை.
//
சரியாக சொன்னீர்கள்.
சொல்லப் போனால் தமிழ்ப் பற்று உள்ள பல பேரும், தனது பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு தமிழே தெரியாமல் வளர்க்கிறார்கள்.
உங்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இதைப் போலவே நானும் ஒரு பதிவு இட்டிருக்கிறேன்.
http://joeanand.blogspot.com/2009/04/blog-post_9262.html