13 Responses to "விபத்து"

ஆகா… இதே விபத்து எனக்கு ஏற்பட்டது நினைவிற்கு வருகிறது. மல்லேஸ்வரம் குட்டலஹள்ளி சர்க்கிளில் பஸ்ஸை இடது பக்கம் முந்த முயற்சிக்கையில் பஸ்ஸும் திரும்ப, Blind Spotல் இருந்த என்னை இடித்து தள்ளி பின் சக்கரம் பைக் மேல் ஏறி அப்பளமாக்கி விட்டது. நல்லவேளை அடி எதுவும் படவில்லை.
உடனே போலீஸ் வந்து பஸ் டிரைவரோடு பக்கத்து ஸ்டேஷனுக்கு போய் ரிப்போர்ட் எல்லாம் செய்துவிட்டுத்தான் வண்டியை எடுத்தார்கள். நானும் பக்கத்தில் ஒரு மெக்கானிக் ஷாப்பில் வண்டியை விட்டுவிட்டு ஆட்டோவில் ஆபீஸ் போய்விட்டேன்.
ஆபீஸிற்குப் போய் சீட்டில் உட்கார்ந்த பிறகுதான் கால்கள் இரண்டும் முழுசாக இருக்கிறது என்பது சந்தோஷமாக உறைத்தது. ரொம்ப நேரத்திற்கு அந்த சந்தோஷம் இருந்தது.


விவேக் பாணியில் சொன்னால் – உங்களோட கடமை உணர்ச்சிக்கும் ஒரு அளவில்லையாடா ?


பெங்களூர் மற்றும் பெரிய நகரங்களில் விபத்துகள் any time நடக்கின்றன. நாம் தான் பஸ் செய்வது நல்லது


நல்ல பகிர்வு சொக்கன்.. அந்த ஓட்டுனர், கண்டக்டரைப் போல் அனைவரும் சமூக அக்கறையுடன் நடந்துகொண்டால் உத்தமம்…


இதில் சொல்லப்பட்டிருக்கும் பைக் காரர் போல விபத்தில் சிக்கியவர்களை, இருபத்து நான்கு மணி நேரம் கண்காணிப்பில் வைத்து இருக்க வேண்டும். ஊமைக் காயமாக இருந்தால் கூட, ஆஸ்பத்திரியில் சேர்த்து, இருபத்து நான்கு மணி நேரத்திற்குள், காதில் இரத்தம் வருகின்றதா / வாந்தி வரும் உணர்ச்சி அல்லது மயக்கம் அதிகப் படியான தூக்கம் – இவைகள் வருகின்றனவா என்று பார்த்து, அப்படி ஏதாவது ஏற்பட்டால், உடனே மருத்துவம் செய்யவேண்டும். இல்லையேல் உயிருக்கு ஆபத்து வரக்கூடும்.


கடந்த வாரம் தான் எனக்கு இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டது, பணிபுரிவது திருப்பூரில் இரவு ஒன்பது மணியளவில் வீடு திரும்பும் போது நடந்து சென்றவர் என் பைக்கில் மோதி விபத்து. (யாரும் சிரிக்க வேண்டாம்!! நான் இதனை என் நண்பர்களிடம் கூறியபோது வலியை மறந்து நானும் சிரித்தேன்) எழுந்து பார்த்தால் அந்த ஆளை காணோம், புருவம், கை மற்றும் கால்களில் சிராய்ப்பு, மேலும் லெப்ட் காலில் எலும்பு முறிவு. யாரோ பொறுப்பில்லாமல் ரோடை கிராஸ் செய்ததன் விளைவு என்னை போன்ற சாமானியனின் இரு வார வேலை, மற்றும் தொழில் இலாபம் பாதிப்பு.
தலை கவசம் அணிந்துஇருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது, இல்லையெனில் …..
கற்றுக்கொண்டது:
1. முப்பத்துஐந்துக்கு கிமீ வேகத்துக்கு மேல் வேகமாக செல்லக்கூடாது (இது நடக்கக்கூடிய காரியமா என சிந்திக்காமல் செயல்படுத்த வேண்டும் என்று இருக்கிறேன்)
2. இனிமேல் யாரேனும் நூறு அடி தள்ளி ரோடு கிராஸ் செய்தால் கூட வண்டியை ஆப் செய்து விட்டு ராம நாமம் ஜபம் செய்ய உத்தேசம்.
3. ஹெல்மெட் இல்லாமல் வண்டியின் சைட் ஸ்டாண்ட் எடுக்கக்கூட உத்தேசம் இல்லை
4. என்னை அன்று மோதிய புண்ணியவானை கண்டுபிடித்து அவரிடம் இருந்து “எஸ்கேப்” ஆவது பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். நாளை நான் யார் மேலாவது மோதினால் தொழில் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?
நல்லது என்னவென்றால் இரு வார விடுப்பில் நிறைய பேரின் பிளாக் படிக்க முடிந்தது. ஜவர்லால் சாரின் உருப்படு புத்தகம் படிக்க முடிந்தது. நல்ல புத்தகங்களை சேகரிக்க முடிந்தது.
சொக்கன் சார் என்னோட பின்னூட்டம் ஸ்டைல் கொஞ்சம் இப்படிதான் இருக்கும் (எண்ணவோட்டத்தை அப்படியே) அதனால தப்ப நினைக்க வேண்டாம். நீங்க மட்டறுத்து எடிட் செய்து போடுங்க உங்க விருப்பப்படி!!
தங்கள்
இராமன் அழகிய மணவாளன்


[…] சொக்கன் சாரின் பதிவினை படித்து அதில் பின்னோட்டம் இட்டு இந்த பதிவினையும் போட்டு விட்டேன். […]


விபத்துக்கள் எல்லார் வாழ்க்கையிலும் இருக்கின்றன.
சில விபத்துக்களுக்கு காதல் என்று பெயர் சொல்லி கல்யாணம் என்று ஐசியுவில் (சிலேடை தானாக வந்தது என்றால் நம்பணும்) வாழ்க்கை முழுக்க மாட்டிக்கொள்கிறோம்.


அருமை இராமன்.
நானும் ஒரு கியர் இல்லாத 2 வீலர் வாங்கலாம் என்று இருக்கிறேன், அது தான் பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு உகந்தது.


பயப்படாமல் வாங்குங்கள் விஜயன் சார். ஹோண்டா ஆக்டிவா நன்றாகவே உள்ளது. பிக்அப் சூப்பர். தற்போது மஹிந்திராவில் புதிய டிசைன் வந்துள்ளது…
ஹெல்மெட் அவசியம். அடிக்கடி பராமரிப்பு செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்.

1 | natbas
October 24, 2010 at 12:02 am
விபத்தா?
யாரோ திட்டம் போட்டு சதி பண்ணின மாதிரியில்ல இருக்கு!