மனம் போன போக்கில்

Archive for January 2011

தற்போது சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சி பற்றிக் கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரியை கானா பிரபா எடுத்த பேட்டி. ஆஸ்திரேலிய வானொலி ஒன்றில் ஒலிபரப்பானதன் இணைய வடிவம். இதனை இங்கே வலையேற்ற அனுமதி தந்த நண்பர் கானா பிரபாவுக்கு நன்றி.

KanaPrabhaInterviewsBadriSeshadriOnChennaiBookFair2011

கானா பிரபாவின் வலைப்பதிவுகள்: http://radiospathy.blogspot.com/http://videospathy.blogspot.com/ மற்றும் http://kanapraba.blogspot.com/

பத்ரி சேஷாத்ரி வலைப்பதிவுகள்: http://thoughtsintamil.blogspot.com/http://bseshadri.blogspot.com/

சென்னை புத்தகக் கண்காட்சிபற்றிய இதர பதிவுகளின் தொகுப்பு: https://nchokkan.wordpress.com/2011/01/05/cbf2011/

பின்குறிப்பு: கானா பிரபா தனது புகைப்படத்தை வெளியிடவேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆகவே நீங்கள் இந்த இடத்தில் அவரது படத்தைக் கற்பனை செய்துகொள்ளவும் :>

(முன்குறிப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி 2011பற்றி என் கண்ணில் படும் பதிவுகள் அனைத்தையும் இங்கே தொகுத்துவைக்கிறேன். ஏதாவது விடுபட்டிருந்தால் nchokkan@gmail.comக்கு அனுப்பிவையுங்கள். சேர்த்துவிடுகிறேன். நன்றி!)

  1. http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_05.html
  2. http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_06.html
  3. http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_07.html
  4. http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_08.html
  5. http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_09.html
  6. http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_10.html
  7. http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_11.html
  8. http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_12.html
  9. http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_3988.html
  10. http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_14.html
  11. http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_15.html
  12. http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_16.html
  13. http://idlyvadai.blogspot.com/2011/01/13.html
  14. http://idlyvadai.blogspot.com/2011/01/13.html
  • பா. ராகவன்
  1. http://www.writerpara.com/paper/?p=1827
  2. http://www.writerpara.com/paper/?p=1842
  3. http://www.writerpara.com/paper/?p=1854
  4. http://www.writerpara.com/paper/?p=1867
  5. http://www.writerpara.com/paper/?p=1877
  6. http://www.writerpara.com/paper/?p=1886
  7. http://www.writerpara.com/paper/?p=1900
  8. http://www.writerpara.com/paper/?p=1913
  9. http://www.writerpara.com/paper/?p=1921
  10. http://www.writerpara.com/paper/?p=1938
  11. http://www.writerpara.com/paper/?p=1942
  12. http://www.writerpara.com/paper/?p=1948
  13. http://www.writerpara.com/paper/?p=1954
  14. http://www.writerpara.com/paper/?p=1954
  • பத்ரி சேஷாத்ரி
  1. http://www.tamilpaper.net/?p=2024
  2. http://www.tamilpaper.net/?p=2051
  3. http://www.tamilpaper.net/?p=2069
  4. http://www.tamilpaper.net/?p=2088
  5. https://nchokkan.wordpress.com/2011/01/08/badri/ (வானொலிப் பேட்டி with கானா பிரபா)
  6. http://www.tamilpaper.net/?p=2103
  7. http://www.tamilpaper.net/?p=2120
  8. http://www.tamilpaper.net/?p=2140
  9. http://www.tamilpaper.net/?p=2159
  10. http://www.tamilpaper.net/?p=2177
  11. http://www.tamilpaper.net/?p=2199
  12. http://www.tamilpaper.net/?p=2219
  13. http://www.tamilpaper.net/?p=2229
  14. http://www.tamilpaper.net/?p=2253
  15. http://www.tamilpaper.net/?p=2271
  • ஜெயமோகன்
  1. http://www.jeyamohan.in/?p=11394
  2. http://www.jeyamohan.in/?p=11451
  3. http://www.jeyamohan.in/?p=11512
  4. http://www.jeyamohan.in/?p=11539
  • குகன்
  1. http://guhankatturai.blogspot.com/2011/01/blog-post.html
  2. http://guhankatturai.blogspot.com/2011/01/2.html
  • மருதன்
  1. http://marudhang.blogspot.com/2011/01/2.html
  2. http://marudhang.blogspot.com/2011/01/blog-post_06.html
  3. http://marudhang.blogspot.com/2011/01/blog-post_07.html
  4. http://marudhang.blogspot.com/2011/01/blog-post_08.html
  5. http://marudhang.blogspot.com/2011/01/blog-post_09.html
  6. http://marudhang.blogspot.com/2011/01/blog-post_16.html
  7. http://marudhang.blogspot.com/2011/01/blog-post_17.html
  • அதிஷா:
  1. http://www.athishaonline.com/2011/01/bookfair.html
  2. http://www.athishaonline.com/2011/01/blog-post.html
  3. http://www.athishaonline.com/2011/01/blog-post_10.html
  • கிருஷ்ண பிரபு
  1. http://online-tamil-books.blogspot.com/2011/01/2011.html
  2. http://online-tamil-books.blogspot.com/2011/01/2011_07.html
  3. http://online-tamil-books.blogspot.com/2011/01/2011_09.html
  4. http://online-tamil-books.blogspot.com/2011/01/blog-post.html
  5. http://online-tamil-books.blogspot.com/2011/01/2011-8.html
  6. http://online-tamil-books.blogspot.com/2011/01/2011-9.html
  7. http://online-tamil-books.blogspot.com/2011/01/2011-10.html
  • முகில்
  1. http://www.writermugil.com/?p=1308
  2. http://www.writermugil.com/?p=1322
  3. http://www.writermugil.com/?p=1332
  • ஜெகதீஸ்வரன்
  1. http://wp.me/pILtz-V1
  2. (வைரமுத்து உரை வீடியோவுடன்) http://wp.me/pILtz-UU
  3. http://wp.me/pILtz-V9
  • லதா மகன்
  1. http://silarojakkal.wordpress.com/2011/01/08/buk-fair-my-first-day/
  2. http://silarojakkal.wordpress.com/2011/01/09/34th-buk-fair-my-2nd-day/
  • ஆர். கோபி
  1. http://ramamoorthygopi.blogspot.com/2011/01/blog-post_08.html
  2. http://ramamoorthygopi.blogspot.com/2011/01/2.html
  • மணிகண்ட குமார்
  1. http://manikandakumar.blogspot.com/2011/01/1.html
  2. http://manikandakumar.blogspot.com/2011/01/2.html
  • அபுல் கலாம் ஆசாத்
  1. http://ennam.blogspot.com/2011/01/blog-post.html
  2. http://ennam.blogspot.com/2011/01/blog-post_16.html
  • சுரேஷ் கண்ணன்
  1. http://pitchaipathiram.blogspot.com/2011/01/2011-1.html
  2. http://pitchaipathiram.blogspot.com/2011/01/2011-2.html
  • எஸ்கா
  1. http://yeskha.blogspot.com/2011/01/blog-post_14.html
  2. http://yeskha.blogspot.com/2011/01/blog-post_18.html
  • சமஸ்
  1. http://samasidam.blogspot.com/2011/01/blog-post.html
  2. http://samasidam.blogspot.com/2011/01/blog-post_21.html
  • கடற்கரய்
  1. http://thesanthri.blogspot.com/2011/01/blog-post.html
  2. http://thesanthri.blogspot.com/2011/02/2.html
  • புத்தகக் கண்காட்சியில் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைப்பதுபற்றி மனுஷ்ய புத்திரன் மற்றும் சாரு நிவேதிதா –> http://charuonline.com/blog/?p=1663
  • புத்தகக் கண்காட்சிக்கென்று தனி விமான நிலையம் கோரும் ச. ந. கண்ணன் –> http://sanakannan.blogspot.com/2011/01/blog-post_07.html

ஓர் அருமையான புத்தகம் படித்து (பார்த்து) முடித்தேன் – ஸ்ரீதர் (என்கிற பரணீதரன், என்கிற மெரீனா – இவரது இணையதளம்: http://marinabharani.com/) அவர்களின் ஆரம்ப கால அரசியல் கார்ட்டூன்களின் தொகுப்பு ‘ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் பாகம் 1’.

ஆரம்பத்தில் இந்தப் புத்தகத்தை எந்தப்  பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வாசிக்கத் தொடங்கினேன். அந்தக் காலத்தின் பதிவு, அப்போதைய ஓவிய பாணியை ரசிக்கலாம் என்பதுதான் முக்கியமான நோக்கம்.

ஆனால் பத்துப் பக்கங்களுக்குள் ஸ்ரீதர் என்னைச் சுண்டியிழுத்துக்கொண்டுவிட்டார். இது வெறும் கார்ட்டூன் தொகுப்பு அல்ல, அந்தக் காலகட்டத்தின் விஷுவல் சரித்திரப் பதிவு என்பது புரிந்தது.

1949 ஜனவரியில் தொடங்கி 1960 டிசம்பர் வரையிலான பன்னிரண்டு வருடங்களில் ஆனந்த விகடன் இதழில் ஸ்ரீதர் வரைந்த கார்ட்டூன்களின் தொகுப்பு இது. அதிக ஆர்ப்பாட்டமில்லாத எளிய கோட்டோவியங்கள் தமிழ்நாடு (அப்போது ‘சென்னை மாகாணம்’), கேரளா, பாகிஸ்தான், இலங்கை, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், மற்ற உலக நாடுகள் என்று சகலத்தையும் தொட்டுச்செல்கின்றன. அந்தக் காலத்து முக்கியத் தலைவர்கள் எல்லோரையும் நுணுக்கமாகக் கவனித்துப் படம் வரைந்திருக்கிறார்.

கார்ட்டூன்களை மொத்தமாக அள்ளி இறைக்காமல், ஒவ்வொரு படமும் எப்போது எந்தச் சூழ்நிலையில் வரையப்பட்டது என்பதற்கான விளக்கமும் தந்திருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் முக்கியமான சிறப்பு. அதுதான் இதனை ஒரு சரித்திர ஆவணமாக மாற்றி அமைத்திருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஐம்பதுகளின் உலகச் சரித்திரம், ஒரு தமிழர் / தமிழ்ப் பத்திரிகையின் பார்வையில்.

(Image Courtesy: http://new.vikatan.com/shopping/index.php?cid=149&pro_id=4&area=1)

ஸ்ரீதரின் முதல் கார்ட்டூன் பட்டாபி சீதாராமய்யா மொழிவாரி மாகாணப் பிரிவினைப் பூனையைக் கொஞ்சுவதில் ஆரம்பமாகிறது. பின்வரும் பெரும்பாலான கார்ட்டூன்களில் நேரு இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாகக் காமராஜரும் ராஜாஜியும், எப்போதாவது அபூர்வமாகப் பெரியார், அண்ணா தென்படுகிறார்கள் (இந்தக் கார்ட்டூன்கள் வரையப்பட்டது 1960க்கு முன்பாக என்பதைக் கவனத்தில் வைக்கவும்).

(Image Courtesy: http://marinabharani.com/index.htm)

அமெரிக்கா, ரஷ்யாவின் ஜப்பான் ஆசை, பர்மாவில் கரேன்கள் கலகம், ரஷ்யாவில் ஸ்டாலின் அடாவடி, சென்னையா கொச்சியா என்று தடுமாறும் திருவாங்கூர் சமஸ்தானம், தொழிலாளர்களைப் பிடித்துச் செல்லப் பார்க்கும் ‘பூச்சாண்டி’களாகக் கம்யூனிஸ்ட்கள் (பின்னர் வரும் கார்ட்டூன்களில் இதே கம்யூனிஸ்ட்கள் தொடர்ச்சியாகக் கரடி உருவத்தில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்), காஷ்மிர் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க மறுக்கும் பாகிஸ்தான், தேசிய சீனாவை இறுக்கிப் பிடிக்கும் பாம்பாக உருவகிக்கப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (பின்னர் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி வந்தபிறகும் அவர்கள் தொடர்ந்து வில்லன்களைப்போல்தான் சித்திரிக்கப்படுகிறார்கள்), அணுகுண்டு பயம், ஆந்திர மாநிலத்தின் ‘சென்னை எனக்குதான்’ பிடிவாதம், இந்தியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் சிலோன் சர்க்கார், அமெரிக்காவில் சகட்டுமேனிக்குக் குத்தித் தள்ளப்பட்ட ’ரஷ்ய உளவாளி’ முத்திரைகள், இந்தியா – பாகிஸ்தான் சேர்ந்து செயல்படாதா என்கிற ஏக்கம், உணவுப்பிரச்னை, அதைச் சரிசெய்ய முயன்று தோற்கும் உணவு மந்திரிகள், வரிச்சுமை, தபால் கட்டண உயர்வு, கைத்தறி நெசவாளர்களின் பிரச்னைகள், பொங்கல் பரிசாக ராஜாஜியின் ’கடன் ஒத்திவைப்புச் சட்டம்’, நேருவின் பஞ்ச சீலக் கொள்கை (ஏனோ ஸ்ரீதரின் பெரும்பாலான கார்ட்டூன்களில் நேரு ‘உர்’ரென்றுதான் இருக்கிறார், க்ளிஷே சமாதானப் புறாக்களைப் பறக்க விடும்போதுகூட!), இந்தித் திணிப்பு, பம்பாய் நகரம் எனக்கா உனக்கா என்று சண்டை போடும் குஜராத், மஹாராஷ்டிரா, ஐந்தாண்டுத் திட்டங்கள், விநோபா பாவேவின் ஸம்பத் தானம், பூ தானம், நேருவுக்கு ராஜாஜி கொடுத்த நெருக்கடிகள், ‘கோதாவரியைத் தெற்கே கொண்டுவருவோம்’ என்று அறிவித்துவிட்டு ஒற்றைக் காலில் தவம் இருக்கும் நவீன பகீரதராகக் காமராஜர், ‘உன்னை நம்பி எப்படிக் கடன் கொடுக்கறது? உன் மனைவி ரொம்பச் செலவுக்காரியாச்சே’ என்று நிதி அமைச்சர் டி. டி. கே.விடம் அங்கலாய்க்கும் உலக வங்கி (அந்த மனைவி, ’ஐந்தாண்டுத் திட்டம்’ ;)), 63 வயதில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் மா ஸே துங், ரயிலில் எதிரே உட்கார்ந்திருக்கும் பெண்களிடம் ‘தாகத்துக்குக் கொஞ்சம் தண்ணி கொடுங்க’ என்று கேட்கும் காமராஜர் (அந்தப் பெண்கள், ஆந்திராவும் கேரளாவும்!), பட்ஜெட்டை நேரு கையில் ஒப்படைத்துவிட்டு சென்னைக்கு நடையைக் கட்டும் டி. டி. கே., நேருவை ஓய்வெடுக்கச் சொல்லும் மற்ற தலைவர்கள், ஓய்வெடுக்கும் ’ரிஷி’ நேருவுக்குக் கடிதங்களைப் படித்துக் காட்டும் உதவியாளராக மகள் இந்திரா, திராவிட நாடு கோரிக்கை, ’இந்தியாவிலேயே சென்னையில்தான் சிறந்த நிர்வாகம் நடந்துவருகிறது’ என்று பாராட்டும் நேரு, ‘அவசியம் ஏற்பட்டால் காய்கறி வியாபாரத்தை சர்க்காரே ஏற்று நடத்தும்’ என்று அறிவிக்கும் சென்னை மாகாண அரசு, ராஜாஜியின் சுதந்தரக் கட்சிக் கொள்கைகள் ‘ஒண்ணுமே புரியலை’ என்று அறிவிக்கும் ம. பொ. சி., ‘எங்க கட்சியில சேர்ந்துக்கறீங்களா?’ என்று காமராஜரைச் சீண்டும் ராஜாஜி, காஷ்மீர் விஷயத்தில் மத்யஸ்தம் செய்துவைப்பதாகச் சொல்லிவிட்டு மௌனம் சாதிக்கும் எகிப்து அதிபர் நாஸர் (அந்த மூக்கு! அதை என்னாமாக வரைந்திருக்கிறார், நாஸர் என்றாலே மூக்கு விசேஷமோ?), ஸ்ட்ரைக் மனப்பான்மை …

நிஜமாகவே சொல்லி முடிப்பதற்குள் மூச்சு முட்டுகிறது. அந்தக் காலத்தில் இவ்வளவு பரந்துபட்ட விஷயங்களைத் தமிழ் கார்ட்டூன்கள் பதிவு செய்திருக்கின்றன என்பதே பெரிய அதிசயம். ஒவ்வொரு நாட்டின் அடையாளமாக அதன் அன்றைய ஆட்சியாளர் முகம் நுணுக்கமாகப் பதிவு செய்யப்படுகிறது, அப்புறம் சமாதான அன்னை, அணு ஆயுத அரக்கன், சமூக விரோதிப் பாம்புகள் ஆங்காங்கே வந்துபோகிறார்கள். இந்தக் கார்ட்டூன்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்திகள் சில இப்போது சாதாரணமாகத் தோன்றினாலும், அன்றைய மொழியில், அப்போதைய கண்ணோட்டத்துடன் அவற்றைப் படிக்கும்போது ஒரு வித்தியாசமான காலப் பதிவு கிடைக்கிறது. சில கருத்துகள் ஒருதலைப்பட்சமாகத் தோன்றினாலும், அந்தக் காலகட்டத்தின் கண்ணாடியாக இந்தப் புத்தகத்தைப் பார்க்கலாம். சரித்திரப் பிரியர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம்.

இரண்டாம் பாகத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

(ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் பாகம் 1 – விகடன் பிரசுரம் – விலை ரூ 190)

***

என். சொக்கன் …

04 01 2011

The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health:

Healthy blog!

The Blog-Health-o-Meter™ reads Wow.

Crunchy numbers

Featured image

About 3 million people visit the Taj Mahal every year. This blog was viewed about 43,000 times in 2010. If it were the Taj Mahal, it would take about 5 days for that many people to see it.

 

In 2010, there were 43 new posts, growing the total archive of this blog to 190 posts. There were 30 pictures uploaded, taking up a total of 2mb. That’s about 3 pictures per month.

The busiest day of the year was April 22nd with 385 views. The most popular post that day was டிஃபன் ரூம்.

Where did they come from?

The top referring sites in 2010 were thoughtsintamil.blogspot.com, twitter.com, writerpara.com, snapjudge.blogspot.com, and tamilish.com.

Some visitors came searching, mostly for nchokkan, பஸ்ஸில் ஏறி, தினமணி, மனம், and மணிமேகலை.

Attractions in 2010

These are the posts and pages that got the most views in 2010.

1

டிஃபன் ரூம் April 2010
15 comments

2

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகருக்கு சாஹித்ய அகாதமி விருது January 2009
33 comments

3

என் பெயர் கார்த்திகேயன் May 2009
43 comments

4

ஒரு புத்தகம், ஒரு போட்டி! July 2010
39 comments

5

உதவி தேவை April 2010
7 comments

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

பொதுவாக இதுமாதிரி விசேஷ நாள்களில் நான் டிவி முன்னால் சிக்காமல் தப்பி ஓடிவிடுவேன். ஆனால் இன்றைக்கு எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டேன். இரண்டே நிகழ்ச்சிகள், அதுவும் தலா பத்து நிமிடங்கள்தான் பார்த்தேன், அவற்றில் பொங்கி வழிந்த போலித்தனம் டிவியைத் தூக்கிப் போட்டு உடைத்துவிடலாமா என்கிற ஆத்திரத்தை உண்டாக்கியது.

இதைப்பற்றி ஒரு நண்பரிடம் புலம்பிக்கொண்டிருந்தபோது, ‘கவலைப்படாதீங்க. உங்க காயத்துக்கு மருந்து போடறதுக்காகவே ஓர் இயல்பான பேட்டி நிகழ்ச்சியோட வீடியோ பதிவை அனுப்பிவைக்கறேன். என்சாய்!’ என்றார்.

(Image Courtesy: http://rajarasigan.blogspot.com/2009/11/jency-songs-in-ilayaraja-music.html)

அந்தப் பேட்டி, பிரபல பாடகி ‘ஜென்ஸி’யுடையது. எப்போதோ ஜெயா டிவியில் வந்தது. மிகச் சுமாரான ரெக்கார்டிங். இரைச்சல் தாங்கவில்லை. சில நிமிடங்களுக்குள் காது வலி. ஹெட்ஃபோனே கதற ஆரம்பித்துவிட்டது, சத்தத்தை மிகவும் குறைத்துவைத்து அவரைக் கிசுகிசுப்பு ரகசியம் பேசவைத்து ஒருவழியாகப் பேட்டியைக் கேட்டு முடித்தேன்.

இத்தனை தொழில்நுட்ப அவஸ்தைகளுக்கும் நடுவிலும், அந்தப் பேட்டி ஒரு முத்து. கொஞ்சமும் அலட்டல் இல்லாமல் இவ்வளவு இயல்பாக ஒருவர் பேசக் கேட்பது மிகவும் இதமாக இருந்தது. ஜென்ஸி பேசியது 90% மலையாளம் என்பதுகூட உறுத்தவே இல்லை.

ஒரே ஒரு குறை, பேட்டி கண்டவர் ஜென்ஸியைக் கோர்வையாகப் பேசவிட்டிருக்கலாம். ஓர் ஒழுங்கே இல்லாமல் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று தொடர்ந்து தாவிக்கொண்டே இருந்ததால் புதிதாகப் பார்க்கிறவர்களுக்கு அவரைப்பற்றிய ஒரு முழுமையான பிம்பம் கிடைத்திருக்காது.

ஏதோ என்னால் முடிந்தது, இந்தப் பேட்டியின்மூலம் தெரிந்துகொண்ட விஷயங்களை இங்கே ஒழுங்குபடுத்தித் தொகுத்துவைக்கிறேன். (அந்த வீடியோவைக் கொடுத்து உங்கள் காதுகளை ரணப்படுத்த விருப்பமில்லை. தைரியமிருந்தால் நீங்களே யூட்யூபில் தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள்!)

  • ஜென்ஸி அறிமுகமானது மலையாளத்தில். அவரது பக்கத்துவீட்டுக்காரர் இசையில் முதல் பாடல்.
  • அடுத்து மலையாளத்தில் இன்னும் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். யேசுதாஸ் அறிமுகம்.
  • ஒருமுறை இளையராஜா, யேசுதாஸ், கங்கை அமரன் (ஆச்சர்யமான கூட்டணி!) மூவரும் சபரிமலைக்குச் சென்றிருந்தபோது யேசுதாஸ் ராஜாவிடம் ஜென்ஸியைப்பற்றிச் சொல்லியிருக்கிறார். ஜென்ஸிக்கு ‘வாய்ஸ் டெஸ்ட்’ அழைப்பு வந்தது.
  • அந்தக் குரல் தேர்வின்போது ஜென்ஸி பாடியது ‘அன்னக்கிளி உன்னத் தேடுதே!’ பாடல்.
  • பாடி முடித்ததும் ’ராஜா சார் ஒண்ணுமே சொல்லலை’யாம். நேரடியாக முதல் பாட்டு ரெக்கார்டிங்குக்குக் கூப்பிட்டுவிட்டாராம். (பின்னர் ராஜா தனது மிகச் சிறந்த பாடல்களைப் பொறுக்கியெடுத்து ஜென்ஸிக்குக் கொடுத்த காலத்திலும், அவர் தன்னைப் பாராட்டியதே இல்லை என்பதில் ஜென்ஸிக்கு இன்னும் மனக்குறை இருக்கிறது. ‘அவருக்குக் கோபம் வராது. ஆனா நல்லாப் பாடியிருக்கே-ன்னும் சொல்லமாட்டார். நீயே இன்னொருவாட்டி கேட்டுப் பாரு, புரியும்’ன்னு சொல்லிடுவார்.’)
  • ஜென்ஸி பாடியதில் அவருக்கு மிகவும் பிடித்தது ‘காதல் ஓவியம்’. அப்புறம் ’என் வானிலே’ பாடலுக்கு முன்னால் வரும் ஆங்கில வசனங்களை(’நோ நோ நோ நோ, ஜஸ்ட் லிஸன்!)ப் பேச ரொம்பவும் வெட்கப்பட்டாராம்.
  • பதினெட்டு வயதுக்குள் ஜென்ஸி தமிழில் மிகப் பெரிய பாடகியாகிவிட்டார். அநேகமாக அவர் தொட்டதெல்லாம் ஹிட்.
  • அந்த நேரத்தில் அவருக்கு அரசாங்க வேலை (ம்யூசிக் டீச்சர்!) கிடைத்திருக்கிறது. போவதா, வேண்டாமா என்கிற குழப்பம்.
  • ஜென்ஸி குடும்பத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டு அரசாங்க வேலை வாங்கியவர்கள். இப்படி வலிய வரும் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று அவர்கள் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். (’கால் காசானாலும் கவர்ன்மென்ட் காசு’க்கு இணையான மலையாளப் பழமொழி ஏதோ இருக்கிறதுபோல!)
  • ஒன்றும் புரியாத ஜென்ஸி ராஜாவிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர் ‘இந்த ஃபீல்ட்ல உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, டீச்சர் வேலையெல்லாம் எதுக்கு?’ என்று கேட்டிருக்கிறார். ’அங்கே வரும் ஒரு மாதச் சம்பளத்தை இங்கே ஒரு பாட்டுப் பாடினால் வாங்கிவிடலாமே’ என்றும் சொல்லியிருக்கிறார்.
  • ’அந்த வயசில எனக்கு எது சரின்னு முடிவெடுக்கிற முதிர்ச்சி இல்லை. டீச்சர் வேலையில சேர்ந்துக்கலாம். அப்பப்போ ரெக்கார்டிங்ஸ் வரும்போது லீவ் எடுத்துட்டு இங்கே வந்து பாடலாம்ன்னு நினைச்சேன்.’
  • அரசாங்க வேலையில் சேர்ந்தபிறகும் ஜென்ஸி சில பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் வருவது நின்றுபோய்விட்டது.
  • 23 வருடங்களுக்குப்பிறகு அவரது ஆனந்த விகடன் பேட்டி ஒன்றைப் படித்துவிட்டு இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் ஜென்ஸியை அழைத்து மீண்டும் பாடவைத்திருக்கிறார் – ஸ்ரீகாந்த் தேவா இசையில் (எந்தப் படம், எந்தப் பாட்டு?)

இந்தப் பேட்டியில் நான் முக்கியமாகக் கவனித்த ஒன்று, ஜென்ஸி ஓர் அபூர்வமான வாய்ப்பை ஜஸ்ட் லைக் தட் இழந்திருக்கிறார். அவர்மட்டும் தமிழில் தொடர்ந்து பாடியிருந்தால் இன்னும் பெரிய உயரங்களுக்குச் சென்றிருக்கக்கூடும். அந்த ஆதங்கம் அவருக்கு லேசாக இருக்கிறது. ஆனால் அதை எண்ணி அவர் (இப்போதும்) புலம்புவதில்லை. ’நா(ஞா)ன் எடுத்த முடிவு தவறாகவே இருந்தாலும் சரி. அதன் பலனை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்’ என்கிற தொனி இருக்கிறது. இது ஓர் அபூர்வ குணம் இல்லையோ?

தலைப்புக் காரணம்: பேட்டியின் இடையில் ஓர் இடத்தில் ’ரசிகை’ என்று சொல்வதற்குப் பதிலாக ஜென்ஸி பயன்படுத்திய (‘நான் SPB சாரோட பெரிய ஆராதகி’) இந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. லவுட்டிக்கொண்டேன்!

***

என். சொக்கன் …

01 01 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,055 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2011
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31