18 Responses to "வாடகை சைக்கிள்கள்"

வாவ் அப்டியே 1986-1988 க்கு ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்தாச்சு !
வாடகைக்கு சைக்கிள் கொடுக்கிற கடைகள் தரங்கை சாலையில் ரெண்டு மூணு இருந்தாலும் குட்டி சைக்கிள் ரெண்டரை அடி உயரத்திற்கு ஒரு மளிகை கடையில் மட்டுமே உண்டு அதை சனி ஞாயிறுகளில் போய் ஒரு மணி நேரம் வாடகைக்கு எடுக்க காலை 6 மணிக்கே போய் தவம் கிடப்போம் கடை 7 மணிக்கு திறக்கப்பட்டு பிறகுதான் கிடைக்கும் அதை தள்ளிக்கொண்டே [ஓட்ட தெரியாது] டிரெயினிங் ஏரியாவுக்கு வந்து டிரெயினரை வைச்சுக்கிட்டு ஓட்டணும்! பிறகு கொஞ்சம் தைரியம் பெற்று பெரிய சைக்கிள் வாடகைக்கு எடுத்து குரங்கு பெடல் . இவையனைத்தையும் விட வாடகைக்கு சைக்கிள் எடுக்கப்போகையில் அங்கு சைக்கிள் இருக்குமா இருக்காதா என்ற மனப்போராட்டத்தினை கண்டிப்பா அனுபவிச்சு பாக்கணும் பாஸ் 🙂


ரொம்ப சந்தோஷமான செய்தி. நான் இன்னமும் சைக்கிளை பிரியமுடன் ஓட்டுகிறேன். இத்திட்டம் வெற்றியடைய என்னாலான பிரார்த்தனைகள்.


//போன தலைமுறையில் நடுத்தரக் குடும்பங்களுடைய போக்குவரத்து சாதனமாக இருந்த சைக்கிள், இப்போது பெருநகரங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது.//
உண்மைதான். நல்ல திட்டங்கள் பெரிய நகரங்கள் அனைத்திலும் வரவேண்டும்.


பழைய நாட்களைக் கொண்டுவந்து நிறுத்தியதற்கு மிகவும் நன்றி.
மற்றவாகனங்களைவிட சைக்கிள்களால் விபத்து குறைவுதான். பங்களூரைப் பற்றி அறிய ஆச்சரியமாக இருக்கிறது.
முக்கியமாக மனதுக்குப் பிடித்தவர்களைப் பார்க்கச் சுற்றும் வாகனமாகச் சைக்கிள் செயல் பட்டதை விட்டுவிட்டீர்களே:)


என்னோட சின்ன வயசு சைக்கிள் அனுபவங்கள் ப்ளாஷ்பேக்காக மனதில் வந்துபோனது. இந்தத் திட்டம் ரொம்பவே நல்லா இருக்கு. நீயா நானான்னு அடிச்சுக்கற இந்நாள், முன்னாள் முதல்வர்கள் சென்னையிலயும் இந்தத் திட்டத்தைக் கொண்டு வரணும்னு பிரார்த்திப்போம். வேறென்ன செய்ய…?


தூது தொடரின் 2வது அத்யயம் என்ன சார் ஆச்சு?
உங்கள் ஊரில் சைக்கிளின் புதிய அவதாரம் நல்லாவே
இருக்கு.


நல்ல பதிவு.


வாடகைச் சைக்கிள் கடைகளில் முக்கியாமாக ஒரு விஷயத்தைப் பார்ப்பார்கள், அது வண்டியை திரும்ப விடும்போது நல்ல நிலையில் விடுகிறார்களா, இல்லை டேமேஜ் ஏதேனும் ஆகியுல்லாதா என்பது. இந்த தானியங்கி சைக்கிள் கடையில் அதை எப்படிப் பார்ப்பார்கள்? எப்படியோ, இந்து நல்ல முன்னேற்றம்.


இப்போதுதான் மக்கள் உணர ஆரம்பித்து உள்ளனர் இந்த நன்மையை. இந்த ஐடியா நல்லா இருக்கு. ஆனால் கிராமங்களில்,சிறு நகரங்களில் இது உதவாது.
என் அப்பா ஒரு முன்னாள் சைக்கிள் கடைக்காரர். கிட்ட தட்ட இருபது வருடங்கள் வைத்து இருந்தார் எங்கள் கிரமாத்தில். தொண்ணூறுகளில் நல்ல நிலைதான். ஆனால் இப்போது அப்படி இல்லை குறைந்த பட்சம் வீட்டில் டிவிஎஸ் எக்ஸ்.எல் உள்ளது. எனவே 2009 இல எடுத்து விட்டு இப்போது தனியார் நிறுவனம் ஒன்றில் இருக்கிறார்.


200 ரூபாய் கார்டு வாங்கிவிட்டு சைக்கிளை அப்படியே தள்ளிக்கொண்டு போய்விடமாட்டார்களா?


.Hello Chokan sir,
I have seen these system in London and nice to see same in bangalore too.I think prices price rises ,ore fastly then gold and other prices. This system ill become fanyc and this ill be trendy


ஹையர் சைகிள் மருவி ஹவர் சைகிள் என்று அந்த நாளில் நாங்கள் சொல்லுவோம் 🙂 ( ஒரு மணி நேர வாடகை என்பதால்). வயதான பிறகு தான் தவறு தெரிந்தது!
amas32


நல்லதோர் யோசனை. போக்குவரத்து பெருகிவரும் இந்நாளில்,காற்று மாசுபடுவதை தடுக்கவும் இத்திட்டத்தை எல்லா மாநில அரசும் ஊக்குவிக்க வேண்டும்.நாமும் ஈகோ இல்லாமல் நம் ஆரோக்கியம் கருதியாவது முனையவேண்டும்.நன்றி.


Nice article. Reminded of what writer Sujatha once wrote. He said that old things (technology) never dies. Instead they come back in a new avatar. He wrote this in the context of typing in Tamil. How he first wrote by hand, then used a typewriter and then moved on to a computer and finally he was able to create a new font from his handwritten text. And that applies to everything now :-)..

1 | Manion.Ramasamy
November 11, 2011 at 6:20 pm
நல்ல திட்டம்!
லண்டன் மாநகரில் பார்த்து நம்ம ஊரூக்கு இது எப்போ வரும்ன்னு வியந்தேன்
http://www.tfl.gov.uk/roadusers/cycling/14808.aspx