மனம் போன போக்கில்

Archive for June 3rd, 2012

  1. nchokkan
    அரசியல் கூட்டங்களின் ஆரம்பப் புள்ளியான ‘தாய்மார்களே’ என்ற வாசகம், இலக்கணப்படி தப்பு :> |1
    Sun, May 20 2012 03:13:34
  2. nchokkan
    ’பம்மார் இறுதிப் பண்டைப் பலர்பால்’ என்பது இலக்கண சூத்திரம், ‘தாய்மார்’ என்றாலே அது Pluralதான், ‘தாய்மார்களே’ அவசியமில்லை |2
    Sun, May 20 2012 03:14:03
  3. nchokkan
    இதேபோல் தம்பிமார், அண்ணன்மார், ஐயன்மார் … எல்லாம் Plural, ஐயன்மீர்கூட Pluralதான், இரண்டுக்கும் வித்தியாசம் தெரியலை |3
    Sun, May 20 2012 03:15:26
  4. nchokkan
    அபூர்வமாகச் சில சமயங்களில், Singular நபர்களை Pluralல் அழைப்பதுண்டு. மகனை ‘மிஸ்டர், இங்கே வா’ என்று அழைப்பதுபோல |4
    Sun, May 20 2012 03:16:12
  5. nchokkan
    உதாரணமாக, நளவெண்பாவில் ஒரு காட்சி தமயந்தி காட்டில் ஒரு பாம்பிடம் அகப்பட்டுக்கொள்கிறார், காப்பாற்ற ஒரு வேடன் வருகிறான் |5
    Sun, May 20 2012 03:17:31
  6. nchokkan
    அவனைப் பார்த்து, ‘ஐயன்மீர் உங்கட்கு அபயம்’ என்கிறாள் தமயந்தி |6
    Sun, May 20 2012 03:18:48
  7. nchokkan
    வந்தது ஒரு வேடன்தான், ஆனாலும் பன்மையில் ‘ஐயன்மீர்’ என அழைத்தது ஏன்? உயிர் காப்பவன் என்பதற்காக எக்ஸ்ட்ரா மரியாதை :> |6
    Sun, May 20 2012 03:19:15
  8. nchokkan
    இதுதொடர்பாக ஒரு வேடிக்கைக் கேள்வி பதில், ‘1330 பாக்கள் கொண்ட நூலைத் திருக்குறள் என்று Singularல் சொல்வது ஏன்? திருக்குறள்கள்தானே சரி?’ |7
    Sun, May 20 2012 03:20:54
  9. nchokkan
    இதற்கு சுஜாதா சொன்ன பதில், ‘திருக்குறள் கள்ளை அனுமதிப்பது இல்லை’ ;))))) |8/8
    Sun, May 20 2012 03:21:19
  10. இந்த ட்வீட்களை எழுதி இரண்டு வாரம் கழித்து, மீண்டும் ஒரு கேள்வி, மீண்டும் ஒரு தேடல், ஆனால் இந்தமுறை தெளிவான விடை கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன் … கீழே படிக்கவும்
  11. nchokkan
    இன்று காலை @elavasam ஒரு கேள்வி கேட்டார். ’மன்னன்’ ஒருமை, ‘மன்னர்’ பன்மை… இங்கே ‘மன்னர்கள்’ என்று சொல்லவேண்டியதில்லை. ஆனால் |1
    Sun, Jun 03 2012 11:20:58
  12. nchokkan
    ‘மன்னர்’ என்பது மரியாதையான ஒருமையும்கூட, இந்த இடத்தில் ‘மன்னர்கள்’, ‘தலைவர்கள்’ போன்றவை சரியா, தப்பா? |2
    Sun, Jun 03 2012 11:21:47
  13. nchokkan
    கொஞ்சம் தேடினேன், சூப்பரான ஒரு விஷயம் தெரிந்துகொண்டேன், ‘இரட்டைப் பன்மை’ (Dual Plural) என்று ஒன்று உள்ளது |3
    Sun, Jun 03 2012 11:22:27
  14. nchokkan
    ’அர்’ விகுதி = பன்மை, ‘அர்கள்’ = இரட்டைப் பன்மை, இது எழுத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிப்படையான விதி இருப்பதாகத் தெரியலை |4
    Sun, Jun 03 2012 11:23:56
  15. nchokkan
    சங்க இலக்கியத்தில் ‘அர்கள்’ விகுதி அநேகமாக எங்குமே இல்லை, Except one place in கலித்தொகை (’உலகு ஏத்தும் அரசர்கள்’) என்று அறிகிறேன் |5
    Sun, Jun 03 2012 11:24:55
  16. nchokkan
    ஒரே ஓர் இடம்தான் எனினும், கலித்தொகையில் இருப்பதால், ’அர்கள்’ விகுதி (தலைவர்கள், மன்னர்கள் etc.,) ஓகே என்று எனக்குப் படுகிறது |6/6

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 621,011 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

June 2012
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930