மனம் போன போக்கில்

அழுகக்கூடாது

Posted on: January 19, 2013

காலையில் மகள்களிடையே ஏதோ செல்லச் சண்டை. சின்னவள் பெரியவளைக் கன்னத்தில் கிள்ளிவிட்டு ஓட, இவள் வழக்கம்போல் அழத் தொடங்கிவிட்டாள்.

‘ஏய் நங்கை, காலங்காத்தால ஏன் இப்படி அழறே?’, மனைவியார் எரிச்சலுடன் கத்தினார்.

‘நான் அழுகவே இல்லை!’ என்றாள் நங்கை விசும்பியபடி.

நான் நங்கையை இந்தப் பக்கம் இழுத்து, ‘உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’ என்றேன்.

‘சொல்லு.’

’ஒரு ஊர்ல ஒரு சின்னப் பொண்ணாம், அவ பேரு நங்கையாம்.’

நங்கைக்குத் தன்னுடைய பெயரில் கதைகள் அமைந்தால் ரொம்பப் பிடிக்கும். ஆகவே, அழுகையை மறந்து ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தாள்.

’ஒருநாள், அந்த நங்கை மார்க்கெட்டுக்குப் போய் ரெண்டு ஆப்பிள் வாங்கினாளாம், ஒண்ணு ரெட் ஆப்பிள், இன்னொண்ணு க்ரீன் ஆப்பிள்.’

’வீட்டுக்கு வந்த நங்கை, சிவப்பு ஆப்பிளைமட்டும் ஃப்ரிட்ஜுக்குள்ளே பத்திரமா வெச்சாளாம், பச்சை ஆப்பிளை அப்படியே டேபிள்மேல வெச்சுட்டாளாம்.’

‘ரெண்டு நாள் கழிச்சுப் பார்த்தா, சிவப்பு ஆப்பிள் மார்க்கெட்ல பார்த்தமாதிரியே ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருந்ததாம், ஆனா பச்சை ஆப்பிள் அழுகிப்போச்சாம்.’

’அப்போ, க்ரீன் ஆப்பிளைப் பார்த்து அந்த ரெட் ஆப்பிள், ’ஹாஹாஹா, நீ அழுகிப் போய்ட்டே, நான் அழுகவே இல்லை’ன்னு சொல்லிச்சாம்.’

‘அப்புறம்?’

‘அவ்ளோதான் கதை’ என்றேன். ‘கொஞ்ச நேரம் முன்னாடி ஏன் அழறேன்னு அம்மா கேட்டபோது நீ என்ன பதில் சொன்னே?’

‘நான் அழுகவே இல்லைன்னு சொன்னேன்.’

‘அழுகிப்போறதுக்கு நீ என்ன ஆப்பிளா? மனுஷங்க அழுகமுடியுமா? அழதான் முடியும்!’

‘ஓ!’ என்றாள் நங்கை, ‘நான் அழவே இல்லைன்னு சொல்லணுமா?’

‘அவ்ளோதான். இனிமே சண்டை போட்டுக்காம, அழாம வெளாடுங்க.’

***

என். சொக்கன் …

19 01 2013

10 Responses to "அழுகக்கூடாது"

”எனக்கு இந்த பெர்சனல் லோன் என்னோட பேங்க் ’மூலியமா’ கெடச்சது” ஒரு நண்பர் நேற்று சொன்னார். மூலம் அவருக்கு பிடிக்காதோ என்னவோ!. அவருக்குச் சொல்ல ஒரு கதை சொல்லுங்களேன்.

ஒரு சின்ன சண்டையிலும் கதை பிறக்கும். கதை கதையாம் காரணமாம்!

nice story

பலபேர்கள் ‘அழுக’ த்தான் செய்கிறார்கள்.

இதைபோல பல வார்த்தைகள் சிதைந்த நிலையில் பயன்படுத்தப் படுகிறது.

‘அந்தப் பாடகி மேல் ஸ்தாயியில் ‘அநாவசியமா ‘ பாடுவார். குரலில் பிசிறே தட்டாது!’
‘அநாயாசமாக’ என்பது ‘அனாவசியமா’ என்று மாறி இருக்கிறது என்று அடுத்த வரிகளில் தெரிந்தது.

இதை எழுதி முடித்தவுடன் ஒரு சந்தேகம் வந்தது. இரண்டு வார்த்தைகளும் தமிழ் இல்லையோ?

Nangai learnt it this young? I learnt it only when I was in MCA, until then, I always used the phrase “azhuga”!

இன்னும் சிலர் எனக்கு அழுகாச்சியா வருது என்பார்கள் 🙂 குழந்தை வளர்ப்பு ஒரு கலை. அதில் முனைவர் பட்டம் நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறீர்கள் 🙂

amas32

செம! நானும் ‘அழுக’ன்னுதான் சொல்வேன். மாத்தணும் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2013
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
%d bloggers like this: