தமிழார்வலர்களும் செல்பேசிக் கணிமையும்
Posted by: என். சொக்கன் on: February 21, 2016
- In: Events | Uncategorized | ViLambaram
- 1 Comment
சென்னையில் நடைபெற்ற ‘செல்பேசிக் கணிமை 2016’ நிகழ்வில் ‘தமிழார்வலர்களும் செல்பேசிக் கணிமையும்’ என்ற தலைப்பில் நான் பேசியபோது (வீடியோ: https://www.youtube.com/watch?v=P8kppRBmBb8) நண்பர்கள் எடுத்த சில புகைப்படங்கள் இவை.
Credits:
புகைப்படம் 1. திரு. வெங்கடரங்கன், இவர் இந்நிகழ்வில் பேசியவர், என் உரையைப்பற்றி இங்கே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: http://venkatarangan.com/blog/2016/02/mobile-apps-technology/
N.Chokkan was brilliant. He outlined 24 points that every app creator has to think through. He started by talking on how you need to adapt for each screen (திரைக்கேற்ற சிந்தனை), then went on listing 100 different ideas for apps that you can build around திருக்குறள், most of them you can adapt to any other major literary work in the world. He talked of importance of partnership (partnership with technologist, developers, UI designers), promotion, competition study, market place study, funding, iteration, user experience, focusing on one single app and much more.
புகைப்படம் 2. திரு. மணிவானதி, இவரது குறிப்பு, இங்கிருந்து: http://manikandanvanathi.blogspot.in/2016/02/infitt-2016.html
எழுத்தாளர் திரு. என்.சொக்கன் தமிழ் ஆர்வலர்களும் செல்பேசி கணிமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். குறுஞ்செயலி உருவாக்கத்திற்கும் சந்தைப்படுத்துதலுக்குமான தகவல்கள் 24 கருத்துகளாகப் பட்டியலிட்டு விளக்கினார். பல ஆயிரம் மனிதர்கள் ஈடுபட்டுள்ள குறுஞ்செயலி உருவாக்கக் களத்தில் அதனை எவ்வாறு உற்றுநோக்கி சந்தையைப் புரிந்து தேவையானவற்றை உருவாக்குவதன் தேவையை விளக்கினார்.
1 | Kathirvel(linuxkathirvel)
February 22, 2016 at 10:49 am
நான் பார்த்தேன் மிகவும் அருமையாக, பயனுள்ளதாக இருந்தது. நான் ஒரு பைத்தான் நிரலாளர். இருப்பினும் API உருவாக்கி கொடுப்பேன். அதனால் எனக்கும் இந்தப் பேச்சு முக்கியமானதாக தெரிந்தது. நிறைய தெரிந்து கொண்டேன். இந்த பேச்சைக் கேட்ட யூடியூப்பில் கேட்ட பின்பு உங்களுடைய யூடியூப் பக்கத்திற்குச் சென்று மற்ற சில பேச்சுகளையும் தரவிறக்கம் செய்தேன். என்னுடைய அலுவலகத்தில் இருக்கும் மொபைல் டெவலப்பர்களிடமும் இந்த வீடியோவைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னேன். அவர்களும் தெளிவு பெற்றார்கள். மகிழச்சி. இதே கருத்தரங்கில் ஆழி.செந்தில்நாதன், மற்றவர்களினுடைய பேச்சு இணையத்தில் இருந்தால் இந்த பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அதுவும் என்னைப் போன்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களுடைய கட்டுரைகளை வலைப்பூ, யூடியூப் போன்றவற்றில் பார்த்ததில் இருந்து நான் ஒன்று தெரிந்து கொண்டேன். நீங்கள் உங்களுடைய அனுபவங்களை ஆவணப்படுத்தி வைத்துவிடுகிறீர்கள். இதைப் போலவே அனைவரும் செய்தால் இந்த சமூகம் இன்னும் மேம்படும். நன்றி.