மனம் போன போக்கில்

நூலூழல்

Posted on: April 4, 2016

மகள்கள் இருவருக்கும் பள்ளிப் புத்தகங்களின் விலைப்பட்டியல் வந்திருந்தது. இருவருக்கும் சேர்த்து ரூ 7200.

அநேகமாக ஒவ்வோராண்டும் நடக்கிற விஷயம்தான், ஆனால் இந்தமுறை கொஞ்சம் யோசிக்கவைத்தது, ஏழாயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள், நோட்டுகளா? அதிகமில்லையோ?

இதை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டபோது, பலரும் ‘இது ரொம்ப மலிவு’ என்றார்கள். பலர் ஒரு குழந்தைக்கே ஐயாயிரத்துக்குமேல் செலவழிப்பதாகச் சொன்னது மேலும் அதிர்ச்சியளித்தது.

ஒரு வகுப்புக்கு, மிஞ்சிப்போனால் ஐந்து பெரிய புத்தகங்கள், ஐந்தாறு சிறிய புத்தகங்கள், அனைத்தும் வண்ணமயமாக அச்சிட்டாலும் இவற்றின் மொத்த விலை ஆயிரத்தைநூறைத் தாண்டாது.

அடுத்து, நோட்டுகள், பலவிதங்களில் சுமார் இருபது நோட்டுகள், ஒவ்வொன்றும் ஐம்பது ரூபாய் என்று வைத்தால் ஆயிரம் ரூபாய்.

மீதமுள்ளவை (அட்டைபோடும் காகிதம், ஸ்டிக்கர் லேபிள், எழுதுபொருள்கள், அனைத்தையும் வைக்கிற பை) ஓர் ஐநூறு. மொத்தம் மூவாயிரம் வருகிறது.

இங்கே நான் சொல்லியிருக்கும் கணக்கு அத்தனையும் ‘அதிகபட்சக்’கணக்குதான், வெளியே சந்தையில் இவற்றை வாங்கினால் நிச்சயம் இரண்டாயிரம் அல்லது அதற்குள் வாங்கிவிடலாம்.

ஆனால், பள்ளிகள் அதை அனுமதிப்பதில்லை. இதற்காகச் சில MBAக்களை வைத்து என்னென்னவோ திட்டம் தயாரிக்கிறார்கள் என்று ஊகிக்கிறேன்.

காரணம், இந்த ஆண்டு 7200 ரூபாய் செலவழிப்பதற்குப் பதில், இந்தப் புத்தகங்களை வெளியே வாங்கிப்பார்த்தால் என்ன என்று நாங்கள் முயன்றபோதுதான் இதற்காகச் செய்யப்படும் தில்லுமுல்லுகள் எனக்குப் புரிந்தன:

1. அனைத்துப் புத்தகங்களையும் ஒரே பதிப்பாளரிடம் வாங்குவதில்லை, வெவ்வேறு பதிப்பாளர்களிடம் வாங்கினால், பெற்றோர் நாலு இடத்தில் தேடமாட்டார்கள்

2. சரி, எல்லாப் பதிப்பாளர் புத்தகங்களையும் விற்கிற கடைகளில் வாங்கினால்? அந்தக் கடைகளில் ஏப்ரல், மே மாதங்களில் இப்புத்தகங்கள் ‘ஸ்டாக் இல்லை’ என்று சொல்லவைத்துவிடுகிறார்கள், இதையும் அனுபவப்பூர்வமாகப் பார்த்தோம்

3. இதை மீறி ஒருவன் போராடுகிறான் என்றால், புத்தகங்களின் பெயர்களைக் கடைசி விநாடிவரை சொல்வதில்லை, அப்புறம் எப்படித் தேடுவீங்க!

4. சரி, புத்தகம் தருகிற அன்று காலை பள்ளிக்குச் சென்று, புத்தகப் பெயர்களைப் பார்த்துக்கொண்டு, வேறு கடைகளில் ஆன்லைனிலோ நேரிலோ சென்று வாங்கினால்? அங்கேயும் ஓர் ‘இக்கு’ வைத்துவிடுகிறார்கள், புத்தகங்கள் ஒரே ஒரு நாள்தான் விநியோகிக்கப்படும், அவற்றை வெளியே வாங்க முயன்று தோற்றால், வருடம்முழுக்க உங்கள் குழந்தை புத்தகங்கள் இன்றிப் படிக்கவேண்டும், அந்த ஆபத்து சாத்தியத்துக்குப் பயந்து பெரும்பாலான பெற்றோர் பணிந்துவிடுவார்கள்

நாங்களும் அப்படிதான் பணிந்தோம், புத்தகங்களை வாங்கிவந்துவிட்டோம், மேலோட்டமாகப் புரட்டியபோது, அதிர்ச்சிகள் இன்னும் பெரிதாக இருந்தன.

ஒவ்வொரு புத்தகத்துக்கும் யானை விலை, அல்லது, டைனோசர் விலை. அவற்றின் அச்சுத்தரத்துக்கு இந்த விலையில் பாதிகூட ஆகாது, அநேகமாக 300% லாபத்தில் விற்பார்கள் என்று ஊகிக்கிறேன், அதில் 100% பள்ளிக்குச் செல்லுமாக இருக்கும்!

சில புத்தகங்கள் ‘சாணித்தாள்’ எனப்படும் மட்டமான காகிதத்தில் இருந்தன, அவற்றைப் பத்துமுறை புரட்டிப்பார்த்தால் கிழிந்துவிடும், விலைமட்டும் நூற்றைம்பது, இருநூறு.

எங்கள் இளைய மகளுக்கு ‘Wizard Of Oz’ பாடமாக உள்ளது, அதற்காக அவர்கள் தந்திருக்கும் புத்தகம் (சுருங்கிய வடிவம்) எண்பது ரூபாய், அதே புத்தகம் வெளியே இன்னும் நல்ல தரமான காகிதத்தில், முழு வடிவத்தில், அழகழகான படங்களுடன் கிட்டத்தட்ட இதே விலைக்குக் கிடைக்கிறது.

இவர்கள் தருகிற (அதாவது, ‘விற்கிற’) நோட்டுப்புத்தகங்களில் விலை குறிப்பிடப்படுவதில்லை, புத்தகங்களின் விலையைக்கூட்டியபின், அதை மொத்த விலையிலிருந்து கழித்துக் கணக்கிட்டால், ஒரு நோட்டுப்புத்தகம் சுமார் 90 ரூபாய் ஆகிறது. சந்தனமரத்தைக் கூழாக்கி அச்சிடுகிறார்களோ என்னவோ!

’படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் ஐயோன்னு போவான்’ என்பது பாரதி வாக்கு. படிப்பிப்பவன் பண்ணினால்?

***

என். சொக்கன் …

04 04 2016

4 Responses to "நூலூழல்"

மருத்துவரைப் பார்க்கப்போனால் தேவையோ தேவை இல்லையோ பல டெஸ்டுகளை எழுதிக் கொடுக்கிறார். அதுவும் இந்த லேபில் தான் இவைகளை எடுக்க வேண்டும் என்று அந்த லேபின் லெட்டர் பேடில் தான் எழுதியே கொடுப்பார். ஒரு MRIக்கு இத்தனை ஆயிரம், ஒரு இரத்தப் பரிசோதனைக்கு இத்தனை நூறு என்று அவருக்குப் போகிறது. வேறு லேபில் எடுத்து வந்தால் இங்கெல்லாம் தரம் சரியில்லை என்பார் அந்த டாக்டர். அதே வேறு ஒரு டாக்டர் தரம் சரியில்லை என்ற இடத்தில் தான் எடுத்து வர வேண்டும், முதல் மருத்துவர் சொன்ன லேப் தான் தரம் சரியில்லை என்பார். கூட்டுக் கலைவாணி கொள்ளைகள். ஒன்றும் செய்ய முடிவதில்லை.

amas32

இவ்வளவு கொள்ளையாக காசு அடித்தரும் கமிசன் பார்த்தாலும் சில பள்ளிகள்

இவ்வளவு கொள்ளையாக காசுபார்த்தாலும் , கமிசன் அடித்தாலும், புத்தகக் கம்பெனிக்குப் பணம் கட்டாத பள்ளித் திருடர்கள் இருக்கிறார்கள். ஒரு பதிப்பாளர் சொன்னது.

போன வருடம் பயன்படுத்தப்பட்ட புத்தகத்தை அந்த வகுப்பு கடந்துபோகும் மாணவர்களிடம் வாங்குதல் வேலை செய்யுமா? அப்படித்தான் கிட்டத்தட்ட 14 + 4 வருடங்களையும் படித்து முடித்தேன். பதிப்பு எண் மாறினாலும், சொல்லிக்கொள்ளும்படியான வேற்றுமைகள் ஒரே ஆண்டில் ஏற்படும் வாய்ப்புகள் மிகக் குறைவே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2016
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
%d bloggers like this: