Archive for the ‘ட்விட்டுரை’ Category
ப்ரொக்ராம் மொழி
Posted by: என். சொக்கன் on: January 7, 2013
- In: ட்விட்டுரை | Games | Humor | IT
- 21 Comments
வழக்கம்போல் இன்று(ம்) ட்விட்டரில் ஒரு விளையாட்டு. நாம் நன்கு அறிந்த பழமொழிகளை சாஃப்ட்வேர் ப்ரொக்ராம்களைப்போல் எழுதினால் எப்படி இருக்கும் என்று முயன்றோம். இதில் பங்கேற்ற எங்களுக்கு செம ஜாலியாகவும், மற்றவர்களுக்கு செம கடுப்பாகவும் இருந்தது 🙂
#ProverbsAsPrograms என்ற tag உடன் நான் எழுதிய ஒரு டஜன் ட்வீட்களின் தொகுப்பு இங்கே, சும்மா படித்துப் பாருங்கள், Syntax Error எல்லாம் சுட்டிக்காட்டி Compilation Error சொல்லக்கூடாது 🙂
என்னோடு இந்த விளையாட்டில் பங்கேற்ற நண்பர்கள் அவர்களுடைய ப்ரொக்ராம்(?)களையும் இங்கே பின்னூட்டத்தில் தந்தால், வருங்காலச் சந்ததிக்குப் பயன்படும். நன்றி!
***
என். சொக்கன் …
07 01 2013
if நெஞ்சம்.isகுற்றம்Exists() {
குறுகுறுப்பு();
}
*
if மடி.isEmpty() {
பயம்.stop();
}
*
{
உப்பிட்டவர்.நினை();
}
while (true)
*
for each (கரை) {
அக்கரை.color = “பச்சை”;
}
*
If (!(பண்டம்.contains(உப்பு))) {
Throw as குப்பை;
}
*
பெருவெள்ளம் += சிறுதுளி;
*
public class தாய் {int பாய்ச்சல்;
பாய்ச்சல் = 8;
}
public class குட்டி extends தாய் {
பாய்ச்சல் = 16;
}
*
public class நல்லமாடு {
int சூடு;
சூடு = 1;
}
public class நல்லமனுஷன் {
int சொல்;
சொல் = 1;
}
*
தளும்புதல் = IIf(குடம்.isFull(), 0, 1);*
switch (event) {case பந்தி:
Position += 1;
break;
case படை:
Position -=1;
break;
}
*
select *from ஊர்கள்
where கோயில்கள் > 0
*
if குடம்.உடைத்தவர்=மாமியார் {
குடம்.material=மண்;
}
else if குடம்.உடைத்தவர்=மருமகள் {
குடம்.material=பொன்;
}
சட்னி அரைக்கும் காதலன் (ட்வீட்டுரை)
Posted by: என். சொக்கன் on: June 26, 2012
- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Poetry | Romance | Uncategorized
- Leave a Comment
-
ஒருத்தன் காதல்வயப்படுகிறான். அவளை நினைத்து ஏக்கப் பெருமூச்சுடன் விழுந்து கிடக்கிறான். அதைப் பார்த்த இன்னொருவன் இப்படிப் பாடுகிறான்: |10
likes·
-
என்னாச்சு இவனுக்கு? இவன் தன்னோட உயிரைப் பெருமூச்சுங்கற அம்மியில வெச்சு அரைக்கறானே! |20
likes·
0
comments -
ஆனா, அம்மியில் அரைக்கப் பொருள்மட்டும் போதுமா, அது குழையறதுக்கு அப்பப்போ நீர் விடணுமே? |30
likes·
0
comments -
அதுவும் உண்டு. பெருமூச்சு எனும் அம்மி, அதுல உயிர்தான் தேங்காய், பொட்டுக்கடலை, அதை அரைக்கறதுக்கு நீர், அவளோட நினைவு / காதல் |40
likes·
0
comments -
இத்தனையும், அரை விருத்தத்தில் சொல்லிவிடுகிறான் கம்பன். சுந்தர காண்டத்தில் சொல்லப்படும் ராவணனின் காதல் அது |50
likes·
0
comments -
காவிஅம் கண்ணி (சீதை) தன்பால் கண்ணிய காதல் நீரால், ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு (ராவணன்) அரைக்கின்றான்! #கம்பேன்டா |6/60
likes·
0
comments
நளவெண்பாவிலிருந்து கொஞ்சம்… (ட்விட்டுரை)
Posted by: என். சொக்கன் on: June 22, 2012
- In: ட்விட்டுரை | Poetry | Uncategorized
- 2 Comments
-
இந்த ’நளவெண்பா’வில் ஒவ்வொரு பாட்டுக்குள்ளும் ஒரு அசரடிக்கும் வரியாவது இருந்துவிடுகிறது, உம்: ‘வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கி’ 1/2
0
likes·
0
comments -
காதல்வயப்பட்ட பொண்ணுக்கு ராத்திரி புழுக்கமா இருக்காம், ‘இரவே, நீ சூரியனை விழுங்கிட்டுப் பிறந்ததால் இப்படி வெக்கையா?’ங்கறா! 2/20
likes·
0
comments -
//நளவெண்பா// தமயந்தி உடம்பிலிருந்து வீசும் அனல் தாங்காமல், அவள் கூந்தல் பூக்களை மொய்த்துக்கொண்டிருந்த வண்டுகளின் சிறகுகள் தீய்ந்துடுதாம்!0
likes·
0
comments -
//நளவெண்பா// தமயந்தி உடல் முழுக்க மன்மதன் அம்புகள் துளைத்து எரிக்க, அவள் நெருப்புக்கு நடுவே தவம் செய்வதுபோல் தெரிந்தாளாம்0
likes·
0
comments -
//நளவெண்பா// ஊரே தூங்கிவிட்டது என்பதைச் சொல்வதற்கு, ‘யாழ் தாம் உள்ளுறை புகுத’ என்கிறார், யாழ்களைப் பொட்டிக்குள் வெச்சுப் பூட்டிடாங்களாம்0
likes·
0
comments -
//நளவெண்பா// ‘இரவே, நீ தின்னும் இரையோ நான்?’ : தமயந்தி!0
likes·
0
comments -
//நளவெண்பா// ஒரே புலம்பல்ஸா இருக்கு, ஜிவ்வுன்னு 50 பாட்டைத் தாண்டி நளன் : தமயந்தி முதலிரவுக்குப் போய்டுவோமா? :>0
likes·
0
comments -
//நளதமயந்தி// முதலிரவுக் காட்சியின் முதல் பாடல், முதல் வரி ‘ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி’… என்னா வார்த்தைத் தேர்வுய்யா 😉0
likes·
0
comments -
//நளவெண்பா// ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி, இருவர் எனும் தோற்றம் இன்றி, புனலுக்கே புனல் கலந்தார்ப்போல் வேலானும் காரிகையும் சேர்ந்தார்!0
likes·
0
comments -
//நளவெண்பா// வல் ஓடும் : சூதாட உதவும் தாயக்கட்டைகள் வெட்கி ஓடும்படி… ம்ஹூம், சென்சார்ட், தேடிப் படிச்சுக்கோங்க 😉0
likes·
0
comments
ஒரு கள், ஒரு கண்ணாடி (ட்விட்டுரை)
Posted by: என். சொக்கன் on: June 3, 2012
- In: இலக்கணம் | ட்விட்டுரை | Uncategorized
- 1 Comment
-
அரசியல் கூட்டங்களின் ஆரம்பப் புள்ளியான ‘தாய்மார்களே’ என்ற வாசகம், இலக்கணப்படி தப்பு :> |10
likes·
0
comments -
’பம்மார் இறுதிப் பண்டைப் பலர்பால்’ என்பது இலக்கண சூத்திரம், ‘தாய்மார்’ என்றாலே அது Pluralதான், ‘தாய்மார்களே’ அவசியமில்லை |20
likes·
0
comments -
இதேபோல் தம்பிமார், அண்ணன்மார், ஐயன்மார் … எல்லாம் Plural, ஐயன்மீர்கூட Pluralதான், இரண்டுக்கும் வித்தியாசம் தெரியலை |30
likes·
0
comments -
அபூர்வமாகச் சில சமயங்களில், Singular நபர்களை Pluralல் அழைப்பதுண்டு. மகனை ‘மிஸ்டர், இங்கே வா’ என்று அழைப்பதுபோல |40
likes·
0
comments -
உதாரணமாக, நளவெண்பாவில் ஒரு காட்சி தமயந்தி காட்டில் ஒரு பாம்பிடம் அகப்பட்டுக்கொள்கிறார், காப்பாற்ற ஒரு வேடன் வருகிறான் |50
likes·
0
comments -
அவனைப் பார்த்து, ‘ஐயன்மீர் உங்கட்கு அபயம்’ என்கிறாள் தமயந்தி |60
likes·
0
comments -
வந்தது ஒரு வேடன்தான், ஆனாலும் பன்மையில் ‘ஐயன்மீர்’ என அழைத்தது ஏன்? உயிர் காப்பவன் என்பதற்காக எக்ஸ்ட்ரா மரியாதை :> |60
likes·
0
comments -
இதுதொடர்பாக ஒரு வேடிக்கைக் கேள்வி பதில், ‘1330 பாக்கள் கொண்ட நூலைத் திருக்குறள் என்று Singularல் சொல்வது ஏன்? திருக்குறள்கள்தானே சரி?’ |70
likes·
0
comments -
இதற்கு சுஜாதா சொன்ன பதில், ‘திருக்குறள் கள்ளை அனுமதிப்பது இல்லை’ ;))))) |8/80
likes·
0
comments -
இந்த ட்வீட்களை எழுதி இரண்டு வாரம் கழித்து, மீண்டும் ஒரு கேள்வி, மீண்டும் ஒரு தேடல், ஆனால் இந்தமுறை தெளிவான விடை கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன் … கீழே படிக்கவும்
-
இன்று காலை @elavasam ஒரு கேள்வி கேட்டார். ’மன்னன்’ ஒருமை, ‘மன்னர்’ பன்மை… இங்கே ‘மன்னர்கள்’ என்று சொல்லவேண்டியதில்லை. ஆனால் |10
likes·
0
comments -
‘மன்னர்’ என்பது மரியாதையான ஒருமையும்கூட, இந்த இடத்தில் ‘மன்னர்கள்’, ‘தலைவர்கள்’ போன்றவை சரியா, தப்பா? |20
likes·
0
comments -
கொஞ்சம் தேடினேன், சூப்பரான ஒரு விஷயம் தெரிந்துகொண்டேன், ‘இரட்டைப் பன்மை’ (Dual Plural) என்று ஒன்று உள்ளது |30
likes·
0
comments -
’அர்’ விகுதி = பன்மை, ‘அர்கள்’ = இரட்டைப் பன்மை, இது எழுத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிப்படையான விதி இருப்பதாகத் தெரியலை |40
likes·
0
comments -
சங்க இலக்கியத்தில் ‘அர்கள்’ விகுதி அநேகமாக எங்குமே இல்லை, Except one place in கலித்தொகை (’உலகு ஏத்தும் அரசர்கள்’) என்று அறிகிறேன் |50
likes·
0
comments -
ஒரே ஓர் இடம்தான் எனினும், கலித்தொகையில் இருப்பதால், ’அர்கள்’ விகுதி (தலைவர்கள், மன்னர்கள் etc.,) ஓகே என்று எனக்குப் படுகிறது |6/60
likes·
0
comments
நான் ஏன் மேனேஜராகணும்? (ட்விட்டுரை)
Posted by: என். சொக்கன் on: May 30, 2012
- In: ட்விட்டுரை | நவீன அபத்தங்கள் | Characters | Communication | Confidence | Differing Angles | Expectation | Fear | Financial | Honesty | IT | Learning | Money | Open Question | Peer Pressure | People | Perfection | Pulambal | Uncategorized | Youth
- 2 Comments
-
இன்று ஒரு கலீக் என்னுடன் பர்ஸனலாகப் பேச வந்தார்.கல்லூரி முடித்து சுமார் இரண்டு வருடங்களாகிறவர்,அவரை Team Leader ஆக்கப் பார்க்கிறார்கள் |1Tue, May 29 2012 11:30:580
likes·
0
comments -
இவருக்குத் தலைமை தாங்குவதில் ஆர்வம் இல்லை, என்னை ப்ரொக்ராமராகவே நிரந்தரமாக இருக்கவிடமாட்டீர்களா? என்றார் கெஞ்சலாக |2Tue, May 29 2012 11:31:300
likes·
0
comments -
’பழைய நெனப்புடா பேராண்டி, பழைய நெனப்புடா’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன் |3Tue, May 29 2012 11:32:070
likes·
0
comments -
‘நான் ப்ரொக்ராம் எழுதப் படித்திருக்கிறேன், தலைமை தாங்கப் படிக்கவில்லை, வேணும்னா 2வருஷம் லீவ் தாங்க,MBA படிச்சுட்டு வர்றேன்’ என்கிறார் |40
likes·
0
comments -
’எம்பிஏவுக்கும் தலைமை தாங்குவதற்கும் சம்மந்தமே இல்லை தம்பி, இது உனக்குப் பிடிக்காட்டி உன் மேனேஜர்கிட்ட சொல்லு’ என்றேன், பயப்படுகிறார் |50
likes·
0
comments -
’காலமெல்லாம் ப்ரொக்ராம் எழுதிகிட்டே இருந்துடலாம்ன்னு நினைச்சேன்,Just because I am senior to someone, doesn’t mean I have to lead them’ |60
likes·
0
comments -
’நான் எதிர்பார்க்கறது தப்பா? இங்கே நாலஞ்சு வருஷம் குப்பை கொட்டின எல்லாரும், பிடிக்காட்டியும், திறமை இல்லாட்டியும் மேனேஜராகியே தீரணுமா?’|70
likes·
0
comments -
அப்புறம், ப்ராக்டிகல் பிரச்னைக்கு வருகிறார், ’ஒருவேளை நான் இப்போ இதை மறுத்துட்டா, என் சம்பளம் குறைஞ்சுடுமோ? காசுக்காக மேனேஜணுமா?’ |80
likes·
0
comments -
இப்படி வரிசையாகப் பல கவலைகளைச் சொன்னார், 24 வயதில் 60 வயதுவரை கற்பனை செய்துவைத்திருக்கிறார், அதுசார்ந்த பல குழப்பங்கள் |90
likes·
0
comments -
நான் எல்லாம் கேட்டுக்கொண்டேன். அவர் கேள்விகளில் நியாயம் உண்டு, அதேசமயம், தன் உரிமைகளை அறியாமலிருக்கிறார், கொஞ்சம் வழிகாட்டினேன் |100
likes·
0
comments -
அதற்குமேல் நான் பேசுவது தகாது. அவர் மேனேஜருக்கும் எனக்கும் அரசியலாகும். ‘மகனே, உன் சமர்த்து, போய் HRரிடம் பேசு’ என்று அனுப்பிவிட்டேன் |110
likes·
0
comments -
ஆனால் அப்போதிலிருந்து அவர் கேட்ட கேள்விகளின் நினைப்பாகவே இருக்கிறது.இந்த IT துறை உருவாக்கிய விருப்பற்ற, அரைகுறை மேனேஜர்கள்தான் எத்தனை!|120
likes·
0
comments -
எனக்குத் தெரிந்து பலர் இதை மறுப்பதில்லை, பயம் காரணமில்லை, எல்லாரும் இதையே செய்வதால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயம் |130
likes·
0
comments -
எனக்கு யாரையும் மேய்க்கத் தெரியாது என்று சொல்வதில் என்ன வெட்கம்? தன்னை ஒழுங்காக மேய்க்கத் தெரிந்தாலே அது பெரும்திறமை அல்லவா? |140
likes·
0
comments -
ஐடி துறையில் இணைந்து 18 மாதம் கடந்த அனைவருக்கும் இதுகுறித்து ஒரு தெளிவான Counseling நடத்தினால் நன்றாயிருக்கும், யார் செய்வார்கள்? |15/150
likes·
0
comments
கொடுமுடிக் கதை (ட்விட்டுரை)
Posted by: என். சொக்கன் on: May 23, 2012
- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Etymology | Reading | Relax | Religion | Uncategorized
- 9 Comments
-
சினிமாவில் ஒரு கதாநாயகனைப் பெரிய ஆள் என்று காட்சிப்படுத்தவேண்டுமென்றால், அவனோடு மோதும் வில்லன் பெரிய பலசாலி என்று காட்டவேண்டும் |10
likes·
0
comments -
அவன் நாலு பேரைப் போட்டுத் துவைப்பதுபோல் காட்சி செய்து, பின்னர் அந்த வில்லனை இந்த ஹீரோ துவைத்தால்தான் ‘நச்’ன்னு இருக்கும் |20
likes·
0
comments -
இதே டெக்னிக்கைக் கவிஞர்களும் நிறைய பயன்படுத்துவார்கள்.ராமனுடன் மோதும் ஒவ்வொரு அரக்கனையும் ‘வஞ்சனையில்லாமல் வர்ணிப்பது’ கம்பர் பழக்கம் |30
likes·
0
comments -
இன்றைக்குப் படித்த உதாரணம், ஆரணிய காண்டத்தில் வரும் கவந்தன். இவனுக்குத் தலை இல்லை வயிற்றுக்கு நடுவில் தலை, விநோதமான உருவம் |40
likes·
0
comments -
தலை இல்லாத அரக்கனைப் பொருத்தமா வர்ணிக்கணுமில்லையா? ‘மேக்கு உயர் கொடுமுடி இழந்த மேரு நேர்’ என்கிறார் கம்பர் |50
likes·
0
comments -
மேக்கு உயர் கொடுமுடி என்றால், மிக உயர்ந்த சிகரங்கள், அதாவது சிகரங்களை இழந்த மலைபோல கவந்தன் இருந்தானாம் |60
likes·
0
comments -
இந்த வரியைப் படித்தவுடன், எனக்கு ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்ற பாட்டுதான் காதுக்குள் கேட்டது. காரணம், ‘கொடுமுடி’ என்ற வார்த்தை |70
likes·
0
comments -
KB சுந்தராம்பாள் என்பதில் உள்ள K = கொடுமுடி, ஈரோடு அருகில் உள்ள ஊர், அங்கே பிறந்த அவருக்குக் ‘கொடுமுடி கோகிலம்’ என்று பட்டம் உண்டு |80
likes·
0
comments -
அந்தக் கொடுமுடிக்கும் இங்கே கம்பர் சொல்லும் கொடுமுடிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? கொஞ்சம் தேடினேன்,செம சுவாரஸ்யமான கதை சிக்கியது |90
likes·
0
comments -
அந்தக் காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் போட்டி, ‘நீ பலசாலியா? நான் பலசாலியா? பார்த்துவிடலாம்!’ |100
likes·
0
comments -
போட்டி இதுதான் : மேரு மலையை ஆதிசேஷன் பிடித்துக்கொள்ளவேண்டியது, வாயுதேவன் அதை ஊதித் தகர்க்கவேண்டியது, யார் ஜெயிப்பார்கள்? |110
likes·
0
comments -
மேரு மலையில் 1000 சிகரங்கள் உண்டாம். அவற்றை ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் பிடித்துக்கொள்ள, மிஸ்டர் வாயு ஊதுறார், ஊதுறார்… |120
likes·
0
comments -
ரொம்ப நேரம் ஊதியபின், மேருமலையில் இருந்த சில சிகரங்கள்மட்டும் பிய்ந்து சென்று தென் இந்தியாவில் விழுந்துவிட்டனவாம் |130
likes·
0
comments -
அப்படிப் பிய்ந்தவை நான்கு சிகரங்கள் என்கிறார்கள், ஐந்து சிகரங்கள் என்றும் சொல்கிறார்கள் |140
likes·
0
comments -
அப்படி விழுந்த சிகரங்களில் ஒன்றுதான், கொடுமுடி (மற்றவை: திருவண்ணாமலை, ரத்தினகிரி, ஈங்கோய் மலை, பொதிகை மலை) |150
likes·
0
comments
- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Poetry | Reading | Uncategorized
- 1 Comment
-
இன்றைக்குக் கம்பன் காலை. முனிவரோடு வீதியில் நடந்த ராமனை சீதைமட்டுமா பார்த்தாள்? பலபேர் ஜொள்ளு,கம்பர் அதை அட்டகாசமாகப் பதிவு செய்கிறார் |10
likes·
0
comments -
’இத்தனை பெண்களின் விழிகளெல்லாம் பட்டுப்பட்டுதான் ராமன் தேகம் கருத்துவிட்டதா? அல்லது அவனது கரிய நிறம் அவர்கள் கண்களில் ஒட்டிக்கொண்டதா? |20
likes·
0
comments -
இன்னொரு பாட்டில், பெண் ஒருத்தி தன் தோழியை அழைக்கிறாள், ‘என்னை அப்படியே கைத்தாங்கலாகப் படுக்கைக்குக் கொண்டுபோ’ என்கிறாள் |30
likes·
0
comments -
’ஏண்டி? உனக்குக் கண் தெரியாதா?’ என்கிறாள் தோழி. ‘இல்லை, நான் என் கண்களை மூடிக்கொண்டுவிட்டேன், இனி திறக்கமாட்டேன்’ என்கிறாள் இவள் |40
likes·
0
comments -
’ஏன் திறக்கமாட்டாய்?’ என்று விசாரிக்கிறாள் தோழி |50
likes·
0
comments -
’ராமனைப் பார்த்தேன், அவன் என்னை விட்டுத் தப்பித்துப் போகமுடியாதபடி கண்களுக்குள் சிறை செய்துவிட்டேன்’ என்று பதில் வருகிறது |60
likes·
0
comments -
இன்னொரு பெண்ணின் புலம்பல், ‘ராமனும் தசரதனும் வாழும் தேசத்தில் ஒருவன் இந்த அப்பாவிப் பெண்ணைத் தாக்குகிறான், நியாயமா?’ |70
likes·
0
comments -
அப்பாவிப் பெண்ணைத் தாக்கிய அந்த ‘ஒருவன்’, மன்மதன். ராமனைப் பார்த்த அவள்மேல் மெல்லிய மேனி என்றும் பார்க்காமல் மலர் அம்பு விடுகிறானாம் |80
likes·
0
comments -
இன்னொருத்தி ‘இத்தனை பெரிய இளவரசன் ராமன், இவன் ஏன் வீதியில் தனி ஆளாக நடந்து வருகிறான்?’ என்கிறாள் |90
likes·
0
comments -
’என்னடி பேத்தல் இது? ராமனோடு முனிவர் வர்றார், லட்சுமணன் வர்றான், நீ என்னடான்னா தனியா வர்றான்னு சொல்றியே?’ |100
likes·
0
comments -
’அவங்களையெல்லாம் யார் பார்த்தாங்க? என் கண்ணுக்கு ராமன்மட்டும்தான் தெரிஞ்சான்’ என்கிறாள் இந்தப் பெண் |110
likes·
0
comments -
ராமனைப் பார்த்தவர்களும், முழுக்கப் பார்க்கலையாம், ’தோள் கண்டார், தோளே கண்டார்’ பாடல் எல்லாருக்கும் தெரியும், அதில் டாப் கடைசி வரி |120
likes·
0
comments -
எல்லாரும் ஒரு கடவுளைப் பார்த்துவிட்டு அவர்மட்டுமே உண்மை என்று நினைக்கிறார்கள், நிஜமான முழுக் கடவுளைப் பார்த்தவர்கள் யாருமில்லை |12a0
likes·
0
comments -
’ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்’ என்று முடிக்கிறார் கம்பர். நாம் யானை கண்ட குருடர்களை ஒப்பிடலாம் |140
likes·
0
comments -
இன்னொருத்தி ‘சிபிச் சக்கரவர்த்தி வம்சத்தில் வந்தவன்தானே இந்த ராமன், குலப் பெருமையில் கொஞ்சமும் இவனுக்கு இல்லையே’ என்று இகழ்கிறாள் |150
likes·
0
comments -
ஏன்? ராமனுக்கு என்ன குறை? ஏன் இகழணும்? |160
likes·
0
comments -
சிபி புறாவுக்காகத் தன் உயிரைக் கொடுத்தான்,ஆனால் இந்த ராமன் எங்களிடம் இருக்கும் உயிரைப் பறித்துக்கொள்கிறான், திருப்பித் தர மறுக்கிறான் |170
likes·
0
comments -
’நயந்தார் உய்யத் தங்கள் இன்னுயிரும் கொடுத்தார் தமர், எங்கள் இன்னுயிர் எங்களுக்கு ஈகல் இவன்’ 🙂 |18/180
likes·
0
comments -
காலை நேரத்தில் கம்ப ராமாயணத்தில் எந்தப் பக்கத்தையும் பிரித்துப் படிக்க ஆரம்பிக்கக்கூடாது. ஆஃபீசுக்கு லீவ் போடத் தோன்றும்!0
likes·
0
comments
சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ. (ட்விட்டுரை)
Posted by: என். சொக்கன் on: May 20, 2012
- In: ட்விட்டுரை | Books | Reading | Reviews | Uncategorized
- 1 Comment
-
ஒரு வீட்டில் கி.வா.ஜ.க்கு விருந்து. முதலில் மாம்பழம், பின் சாப்பாடு, தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள மாவடு போட்டார்கள் |10
likes·
0
comments -
அதுபற்றி அவர் பாடிய வெண்பாவின் கடைசி வரிக் குறும்பு: ‘கனிக்கப்புறம் வருமாங் காய்’ (வரும் மாங்காய், வருமாம் காய் 🙂 |20
likes·
0
comments -
மன்னிக்க, அது ‘கனிக்கப்புறம்’ அல்ல ‘கனிக்குப்பின்’ |30
likes·
0
comments -
கிவாஜ கலந்துகொண்ட ஒரு கவியரங்கம். கவிஞர்களுக்குப் பொன்னாடை போர்த்தினார்கள், ‘மாலை இல்லையா?’ என்று கேட்டார் ஒருவர் |40
likes·
0
comments -
’கவிகளுக்கு மாலை போட்டால் என்ன ஆகும் என்று தெரியாதா?’ என்று குறும்பாகக் கேட்டார் கிவாஜ (கவி = குரங்கு) |50
likes·
0
comments -
கிவாஜவைப் பேச அழைத்த ஒருவர் ‘என் கவனிப்பில் குற்றம் குறை இருந்தால் மன்னிக்க’ என்றார், இவர் பதிலுக்கு ‘குற்றம் குறைதான்’ என்றார் |60
likes·
0
comments -
’தென்னைக்கும் மனிதனுக்கும் நேர் விரோதம்’ என்பார் கிவாஜ. காரணம், தென்னைக்கு இளமையில் வழுக்கை, மனிதனுக்கு முதுமையில் |70
likes·
0
comments -
கிவாஜ பெயரைச் சிலர் ‘ஜெகந்நாதன்’ என்று எழுதுவார்கள். ‘எனக்குக் கொம்பு இல்லை’ என்று நாசூக்காகத் திருத்துவார் |80
likes·
0
comments -
தன் டிரைவர்களுக்குக் கிவாஜ சூட்டிய செல்லப் பெயர்கள் ‘பார்த்தசாரதி’ (நான் பார்த்த சாரதி),’சக்கரபாணி’ (ஸ்டீயரிங் வீல் பிடித்திருப்பதால்) |90
likes·
0
comments -
’ரயில் ரொம்ப சத்தம் போடுகிறது’ என்றார் நண்பர். ‘ஆமாம், இந்த ரயிலில் சத்தம் அதிகம்தான்’ என்றார் கிவாஜ (சத்தம் = sound / ticket price) |100
likes·
0
comments -
’முருகன் தேவர்கள் படைக்குத் தலைவனாக, தேவ சேனாபதியாக இருந்தான், பின் தேவயானியை மணந்து தேவசேனா பதி ஆனான்’ : கிவாஜ |110
likes·
0
comments -
கணவன் மனைவி ஒருவரை நமஸ்கரிக்கும்போது, ஆணுக்கு வலப்புறம் பெண் நிற்பது ஏன்? காரணம் ‘பெண்ணுக்கு ஆண் இடம் தரமாட்டான்’ : கிவாஜ |120
likes·
0
comments -
ஒருவர் கிவாஜவுக்கு முந்திரிப் பழம் தந்தார்.‘முழுப்பழம் இல்லையா, முந்திரிப் பழம்தானா?’ என்று சிரித்தார் இவர். முந்திரி=1/32 in tamil |130
likes·
0
comments -
நண்பர் மகள் அவருக்கு மாதுளம்பழம் கொடுத்தார். ‘இந்த மாது உளங்கனிந்து கொடுத்த மாதுளங்கனி ரொம்ப இனிக்கிறது’ என்றார் கிவாஜ |140
likes·
0
comments -
கிவாஜ குள்ளம். அவரை ஒருவர் அகத்தியர் என்றார். ‘ஆமாம், நானும் கும்பத்தில்தான் பிறந்தேன்’ என்றார் இவர் கும்பம் = குடம் / ஒருவகை ராசி |150
likes·
0
comments -
முந்தைய 15 ட்வீட்களில் வந்த துணுக்குகள் அனைத்தும், ’சிரிக்க வைக்கிறார் கிவாஜ’ புத்தகத்திலிருந்து. அல்லயன்ஸ் பதிப்பகம், விலை ரூ 35/- |160
likes·
0
comments -
பாதிக்குப் பாதி அருமையான சிலேடைகள். கிவாஜ எந்நேரமும் வார்த்தைகளோடு செம ஜாலியாக விளையாடியபடி வாழ்ந்திருக்கிறார் |170
likes·
0
comments -
இந்தப் புத்தகத்தை இணையத்தில் இலவசமாகவும் டவுன்லோட் செய்து படிக்கலாம், Strongly recommended : http://tamilvu.org/library/nationalized/pdf/46.KI.VA.JA/SIRIKKAVAIKIRARKI.VA.JA(114).pdf |180
likes·
0
comments -
கிவாஜ எழுதிய நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள், அனைத்தும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ள இங்கே : http://tamilvu.org/library/nationalized/html/naauthor-44.htm |19/190
likes·
0
comments -
கிவாஜ வாழ்க்கை வரலாறு : எங்க ஊர்க் காரர் 🙂 http://groups.google.com/group/minTamil/msg/6e33fa89f3f2b8dc?pli=1 |20/200
likes·
0
comments
ராவணனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா (ட்விட்டுரை)
Posted by: என். சொக்கன் on: May 20, 2012
- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Humor | Poetry | Reading | Uncategorized
- 2 Comments
-
ராவணன் சபையை வர்ணிக்கும்போது கம்பரின் குறும்பு அபாரம், சில சமீபத்திய அரசியல் தலைவர்களை நினைவுபடுத்தக்கூடும், உதாரணமாகச் சிலது |10
likes·
0
comments -
ராவணனோட கால் கழல் தங்கம் இல்லை, ஆனா ஜொலிக்கும், ஏன்?அவன் கால்ல விழற மந்திரிகள் தலைக்கிரீடத்திலேர்ந்து டெய்லி அங்கே தங்கம் ஒட்டிஒட்டி.. |20
likes·
0
comments -
ராவணன் எப்ப நம்ம பக்கம் திரும்புவானோ தெரியாது, எதுக்கும் இருக்கட்டும்ன்னு மந்திரிமார்கள் எப்பவும் தலைல கை வெச்சுக் கும்பிட்டபடி… |20
likes·
0
comments -
ராவணன் ‘அந்த ஃபேனைப் போடு’ன்னு பணிப்பெண்கிட்ட சொன்னா, தங்கள்கிட்டே சொன்னதா நினைச்சு அமைச்சர்கள் எல்லாம் போட்டி போட்டுகிட்டு ஓடி… |40
likes·
0
comments -
ராவணன் யார்ட்டயாவது தணிஞ்ச குரல்ல பேசினாப் போச்சு, மத்த எல்லாரும் அவன் தங்களைப்பத்திதான் பேசறானோன்னு பயந்து நடுங்குவாங்களாம்… |50
likes·
0
comments -
சத்தியமா இதெல்லாம் பல நூறு வருஷங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது, நம்பணும் :> #கம்பன்டா |6/60
likes·
0
comments
ராவணன் பட்ட பாடு (ட்விட்டுரை)
Posted by: என். சொக்கன் on: May 20, 2012
- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Poetry | Reading | Uncategorized
- 1 Comment
-
ராவணனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா (http://storify.com/nchokkan/-5) கம்பீரத்திலிருந்து சடாரென்று ட்ராக் மாறுகிறான் ராவணன், காரணம் சூர்ப்பணகை |10
likes·
0
comments -
சீதையின் அழகை அவள் புகழோ புகழென்று புகழ்ந்து தள்ள … (இவளைப் பற்றி உன்னிடம் சொன்னதால், உன் பெண்டாட்டிமார்களுக்கு நான் விரோதி) |20
likes·
0
comments -
ராவணன் காதல்வயப்படுகிறான். உடம்பெல்லாம் அனல் கொதிக்கிறது. படுக்கை நோகிறது (கருகுகிறது), காற்று வாங்கலாம் என்று சோலைக்குப் போகிறான் |30
likes·
0
comments -
பின்பனிக்காலம், ஆனால் இவன் உடம்பு கொதிக்கிறது,‘என்னடா வெதர் இது? Change This’ என்கிறான், இயற்கை பயந்து வேனிற்காலத்துக்கு switch ஆகிறது |40
likes·
0
comments -
’ம்ஹூம், இது சரிப்படாது, எனக்குக் குளிர் காலம் வேணும்’ என்கிறான் ராவணன். உடனே Winter தொடங்கிவிடுகிறது :> |50
likes·
0
comments -
’இது குளிர்காலமாடா? கொதிக்குது, இதுக்குக் கோடைகாலமே பரவாயில்லையே’ என்கிறான் ராவணன். என்ன செய்வது என்று புரியாமல் திகைக்கிறது இயற்கை |60
likes·
0
comments -
’எனக்கு எந்தக் காலமும் வேணாம், Cancel All’ என்கிறான், எல்லாக் காலங்களும் பயந்து ஓடிவிடுகின்றன :))) |70
likes·
0
comments -
’சீதையை நினைச்சு உடம்பு ரொம்ப கொதிக்குது, கொஞ்சம் இதமா ஏதாச்சும் வேணும், நிலவைக் கொண்டு வா, கட்டிலில் கட்டி வை’ என்கிறான் ராவணன் |80
likes·
0
comments -
அப்போது நிலா அந்தப் பக்கமே இல்லை, ராவணனுக்குப் பயந்து எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறது, சேவகர்கள் ஓடிப்போய் அதை அழைக்கிறார்கள் |90
likes·
0
comments -
முன்பு இந்த நிலாவிடம் ராவணன் ஏதோ வம்பு செய்திருக்கிறான். ஆகவே நிலாவுக்கு அவன்மீது கடுப்பு, ஆனால் அதை வெளிக்காட்டமுடியாத நிலைமை |100
likes·
0
comments -
ஆகவே, இப்போது ‘நல்ல சான்ஸ்’ என்று முடிவு செய்கிறது நிலா. காதல் தாபத்தில் இருக்கும் அவன்மீது பனியைப் பொழிந்து இன்னும் வேகவைக்கிறது |110
likes·
0
comments -
ராவணன் கடுப்பாகிறான், ‘டேய் அப்ரெண்டிசுகளா, நிலாவைக் கூட்டிவரச் சொன்னா மறந்துபோய் சூரியனை இழுத்துகிட்டு வந்துட்டீங்களேடா’ என்கிறான் |120
likes·
0
comments -
வேலைக்காரர்கள் நடுங்கிப்போகிறார்கள், ‘ஐயா, நாங்க உங்க பேச்சை மீறுவோமா? இது நிலாதான், நம்புங்க’ என்கிறார்கள் |130
likes·
0
comments -
ராவணன் நம்பாமல் பார்க்கிறான், ‘ஏய் நிலா, உனக்கு என்னாச்சு? என்னைமாதிரி எவமேலயோ காதல்வயப்பட்டுப் புத்தி மாறிட்டியா?’ என்கிறான் :> |140
likes·
0
comments -
’எனக்குத் தெரியும், நீ சீதையோட முக அழகுக்கு முன்னாடி தோத்துப்போய்ட்டே, அதான் உனக்குக் கடுப்பு’ என்று நிலாவிடம் சொல்கிறான் ராவணன் |150
likes·
0
comments -
இதில் காமெடி என்னவென்றால், ராவணன் சீதையைப் பார்த்ததே கிடையாது, சூர்ப்பணகையின் நேர்முக வர்ணனை effect :> |160
likes·
0
comments -
நடுவில் ஒரு பாட்டு, ‘சீதை ராவணனின் மனத்தில் கலந்துவிட்டாள், அவன் எப்படி அவளை மறப்பான்? அதற்கு இன்னொரு மனமா இருக்கு?’ என்கிறார் கம்பர் |170
likes·
0
comments -
இதை ’இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன், நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று’ என்று அட்டகாசமாக எளிமைப்படுத்தினார் கவியரசர் |180
likes·
0
comments -
பார்க்காத ஒரு பெண்ணை நினைத்து ராவணன் இந்தப் பாடு படுகிறான் என்றால், சூர்ப்பணகையின் சொல்திறனை வியக்கவேண்டும், அவள் செம intelligent |190
likes·
0
comments -
ராமன், லட்சுமணன், கரன், இப்போது ராவணன் என்று வரிசையாக ஒவ்வொருவரிடமும் அவள் பயன்படுத்தும் ‘தூண்டில்’கள் சைக்காலஜி தெரிந்தவை |200
likes·
0
comments -
ஒரு வில்லி பாத்திரத்தைக்கூட வெறுக்கமுடியாமல் ரசிக்கும்படி காட்சிப்படுத்துவது சாதாரண விஷயமில்லை #கம்பன்டா |21/210
likes·
0
comments
comments