கவிதை வாங்கி வந்தேன்
Posted June 10, 2013
on:- In: Books | Reviews
- 8 Comments
சில புத்தகங்களைப் படிக்கத் தொடங்கும்போது, ஏதோ ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்பில் இருப்போம், ஆனால் அவற்றைப் படித்து முடிக்கும்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு பலன் கிடைத்துவிடும்.
உதாரணமாக, ஒரு தனி நபருடைய வாழ்க்கை வரலாறுப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்குகிறோம், ஆனால் அதன்மூலம் அவர் சார்ந்திருக்கும் துறையைப்பற்றிய முழுமையான பார்வை கிடைத்துவிடுகிறது.
அல்லது, ஒரு நாவலைக் கதைக்காகப் படிக்க எடுக்கிறோம், ஆனால் அந்த நாவல் எழுதப்பட்டிருக்கும் களம்பற்றிய நுணுக்கமான தகவல்களை அறிந்துகொள்கிறோம், அப்போது அது Fictionனாகவே இருப்பினும், கிட்டத்தட்ட ஒரு Non Fictionபோல் தொனிக்கிறது.
உரப்புளி நா. ஜெயராமன் எழுதியிருக்கும் ‘மஞ்சத் தண்ணி’ சிறுகதைத் தொகுப்பும் அப்படிதான். சில நல்ல கிராமத்து மனிதர்களின் ஆளுமைகள், பழக்கவழக்கங்கள், உணர்வுகளைக் கதைவடிவில் தெரிந்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தால், அங்கே மிக வித்தியாசமான ஒரு முத்து ஒளிந்திருக்கிறது.
எழுபதுகள், எண்பதுகளில் வந்த இந்தக் கதைகளில் செய்நேர்த்திக்குக் குறைச்சல் இல்லை. ஆங்காங்கே பிரசார வாசனை இருப்பினும், அருமையான பாத்திரங்கள், ஆழமான சிந்தனைகள், காட்சி அமைப்புகள், வசனங்கள், நுணுக்கமாக அமைக்கப்பட்ட படிமங்கள் என்று சுவையான வாசிப்பு அனுபவம் உள்ளது.
ஆனால், 11 கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் இரண்டு கதைகள்மட்டும் சற்றே வித்தியாசப்பட்டு நிற்கின்றன. மற்ற ஒன்பது கதைகளைக் கொஞ்சம் மெனக்கெட்டால் வேறு யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கமுடியும், இந்த இரண்டு கதைகளை, இவரால்மட்டும்தான் எழுதமுடியும்.
அப்படி என்ன விசேஷம் இந்தக் கதைகளில்?
இன்றைக்கு நாம் ஒரு பொத்தானைத் தட்டினால் உலகில் எங்கு வேண்டுமானாலும் பேசிவிடுகிறோம். சிறு கிராமங்களில்கூட செல்பேசி நுழைந்துவிட்டது.
இதனால், இதற்கு முன்பாக நிகழ்ந்த தொலைதொடர்புப் புரட்சியை, அதாவது, Landline என்று நாம் சற்று இழிவாகவே குறிப்பிடும் தொலைபேசிக் கட்டமைப்பு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்த விதத்தை நாம் கொஞ்சம் அலட்சியமாகவே பார்க்க வாய்ப்புள்ளது. ‘அது ஒரு பெரிய விஷயமா? ஒரு டவரை வெச்சா சிக்னல் வருது!’
உண்மை அப்படியில்லை. தொழில்நுட்பத்தின் ஆரம்ப நிலையிலிருந்த அன்றைய நாள்களில், இந்தியாவின் ஒவ்வொரு குக்கிராமத்தையும் தொலைபேசி வலைப்பின்னலில் இணைப்பதற்காக BSNL நிறுவனம் உழைத்திருக்கிறது. இதை நேருக்கு நேர் பார்த்த, அதில் நேரடியாகப் பங்கு பெற்ற உரப்புளி நா. ஜெயராமன் தனக்குப் பிடித்த கதை வடிவத்தில் அந்த அவஸ்தையை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
உதாரணமாக, ஒரு கிராமத்திற்குத் தொலைபேசி இணைப்பு வரவேண்டும் என்றால், அதை முன்னெடுத்துச் செல்வது யார்? கிராமவாசிகளா, அல்லது அரசு அதிகாரிகளா?
அப்படியே ஒருவர் முன்னெடுத்துச் சென்றாலும், மற்றவர்களைத் திரட்டுவது யார்? போதுமான எண்ணிக்கையில் இணைப்புகள் இல்லாவிட்டால் என்ன செய்வார்கள்? எப்படி ஆதரவு சேர்ப்பார்கள்?
இணைப்புகள் கிடைத்துவிட்டாலும், கருவிகளுக்கு எங்கே போவது? அவற்றை எங்கே வைப்பது? ஃபோனைப் பொறுப்பாக வீட்டில் வைத்து, மற்றவர்களைப் பேச விட்டு, காசு வாங்கி, மாதம் முடிந்ததும் பில் கட்டுவது யார்? அதற்கு என்னமாதிரி எதிர்ப்புகள் இருந்தன, அவற்றை எப்படிச் சமாளித்தார்கள்?
இத்தனை சிரமப்பட்டுக் கிராமம் கிராமமாகச் சென்று வேலை செய்யும் அளவு அந்த அதிகாரிகளுக்குச் சேவை மனப்பான்மை இருந்ததா? அவர்களுக்கு இதில் என்ன லாபம்? ஏன் இதில் முனைப்போடு ஈடுபட்டார்கள்? சம்பளத்துக்காகவா? மேலதிகாரிகளின் அதட்டலுக்குப் பயந்தா? வேறு காரணமா?
புதிதாக வந்த ஃபோனை கிராமவாசிகள் எப்படிப் பார்த்தார்கள்? அவற்றை ஒழுங்காகப் பராமரித்துக்கொண்டார்களா? அதில் நிகழ்ந்த வேடிக்கையான அனுபவங்கள் என்னென்ன?
இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தொலைபேசி என்கிற ஒரு சின்ன விஷயம், இந்தக் கிராமவாசிகளின் வாழ்க்கையை எப்படி(நல்லவிதமாக)ப் புரட்டிப்போட்டது, அதன்மூலம் எத்துணை உயிர்கள் காப்பாற்றப்பட்டன, எத்துணை உறவுகள் நிலைநிறுத்தப்பட்டன!
இந்த விவரங்கள் அனைத்தையும் கதைப்போக்கில் அழகாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். சுமார் 15 நிமிடங்களில் வாசிக்கக்கூடிய இரண்டே கதைகளின்மூலம், எனக்குக் கண் திறந்தமாதிரி ஓர் உணர்வு. மாட்டு வண்டி செல்லக்கூடப் பாதை இல்லாத கிராமங்களையெல்லாம் தொலைபேசியின்மூலம் இணைத்த ஒரு மாபெரும் புரட்சியை நாம் சற்றும் கண்டுகொள்ளாமல், அதற்காக உழைத்தவர்களை மனத்தளவில்கூடக் கௌரவிக்காமல் ஜஸ்ட் லைக் தட் தாண்டிச் சென்றுவிட்டோமோ என்கிற குறுகுறுப்பு.
உரப்புளி நா. ஜெயராமன் அவர்கள் இதுபற்றி இன்னும் விரிவாக எழுதவேண்டும், கதையாகமட்டுமின்றி, சரித்திரப் பதிவாகவே செய்யவேண்டும், ஒரு கிராமத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு அதில் தொலைபேசி வந்த விதத்தை, அதில் எழுந்த சவால்களை, அரசாங்க நெருக்கடிகளை, மக்களின் உணர்வுகளை, உதவிகளை, எதிர்ப்புகளை, சவால்களையெல்லாம் விரிவாகச் சொன்னால், நாம் இன்றைக்குப் பத்தோடு பதினொன்றாக நினைக்கும் அரசாங்கத் தொலைபேசி நிறுவனத்தின் உண்மையான சமூகப் பங்களிப்பு என்ன என்பது புரியும்.
(மஞ்சத் தண்ணி : உரப்புளி நா. ஜெயராமன் : 128 பக்கங்கள் : விலை ரூ 70 : அட்சயா பதிப்பகம் : (0)9486101986)
***
என். சொக்கன் …
10 06 2013
8 Responses to "கவிதை வாங்கி வந்தேன்"

மரம் வைத்தவன் ஒருவன் பலன் அனுபவிப்பான் ஒருவன்
என்பதற்கு உதாரணம் bsnl தான்
இன்றைய வசதிகளில் பல அன்று இல்லை ஆனால் அன்றைய
ஊழியர்கள் கடமையும் கண்ணியமும் சிரத்தையும் கொண்டிருந்தார்கள்
அர்ப்பணிப்பு உணர்வு அனைவரிடமும் இருந்தது
அன்று மிகச் சிலரிடம் தான் தொலைபேசி இருந்தது
தொலைபேசி அழைப்பு பக்கத்து வீடுகளுக்கும் வரும்
நேரம் காலம் கிடையாது ஆனால் முழு மனதோடு
உதவும் குணம் இருந்தது
இப்படி எத்தனையோ
அது அந்தக் காலம் பொற்காலம்
இன்றோ அத்தனையும் போர்க்கோலம் தான்
ச கம்பராமன்
10 06 13


மரம் வைத்தவன் ஒருவன்
தண்ணீர் ஊற்றியவன் ஒருவன்
அனுபவிப்பவன் ஒருவன்
2013/6/10 karpaka vinayagar enterprises madurai
>
>
> 2013/6/10 karpaka vinayagar enterprises madurai
>
>> மரம் வைத்தவன் ஒருவன் பலன் அனுபவிப்பான் ஒருவன்
>> என்பதற்கு உதாரணம் bsnl தான்
>>
>> இன்றைய வசதிகளில் பல அன்று இல்லை ஆனால் அன்றைய
>> ஊழியர்கள் கடமையும் கண்ணியமும் சிரத்தையும் கொண்டிருந்தார்கள்
>> அர்ப்பணிப்பு உணர்வு அனைவரிடமும் இருந்தது
>>
>> அன்று மிகச் சிலரிடம் தான் தொலைபேசி இருந்தது
>> தொலைபேசி அழைப்பு பக்கத்து வீடுகளுக்கும் வரும்
>> நேரம் காலம் கிடையாது ஆனால் முழு மனதோடு
>> உதவும் குணம் இருந்தது
>>
>> இப்படி எத்தனையோ
>> அது அந்தக் காலம் பொற்காலம்
>> இன்றோ அத்தனையும் போர்க்கோலம் தான்
>>
>>
>> ச கம்பராமன்
>> 10 06 13
>>
>>


இர்விங்க் வேலஸ் எழுதிய PRIZE நாவலில் நோபல் பரிசு பற்றிய தகவல்கள் ஏராளம். அதனாலும் அந்த நாவல் வெற்றி பெற்றது.= psr


மிகவும் அருமையான மதிப்புரை! இந்த ‘மஞ்சத் தண்ணி’ சிறுகதைத்தொகுப்பை எங்களது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பரமக்குடி கிளை 31.05.2013 அன்று நடத்திய வெளியீட்டு விழாவில் வெளியிட்டு மிகச் சிறப்பான மதிப்புரைகளையும் பாராட்டுக்களையும் அளித்துச் சிறப்பித்தது. (பார்க்க-தினமலர் 08.06.2013- பக்கம்.13-இராமநாதபுரம்,சிவகங்கை.)
அ.ஜோசப்,பரமக்குடி.


மிகவும் நன்றி!

1 | karpaka vinayagar enterprises madurai
June 10, 2013 at 11:46 am
2013/6/10 karpaka vinayagar enterprises madurai
> மரம் வைத்தவன் ஒருவன் பலன் அனுபவிப்பான் ஒருவன்
> என்பதற்கு உதாரணம் bsnl தான்
>
> இன்றைய வசதிகளில் பல அன்று இல்லை ஆனால் அன்றைய
> ஊழியர்கள் கடமையும் கண்ணியமும் சிரத்தையும் கொண்டிருந்தார்கள்
> அர்ப்பணிப்பு உணர்வு அனைவரிடமும் இருந்தது
>
> அன்று மிகச் சிலரிடம் தான் தொலைபேசி இருந்தது
> தொலைபேசி அழைப்பு பக்கத்து வீடுகளுக்கும் வரும்
> நேரம் காலம் கிடையாது ஆனால் முழு மனதோடு
> உதவும் குணம் இருந்தது
>
> இப்படி எத்தனையோ
> அது அந்தக் காலம் பொற்காலம்
> இன்றோ அத்தனையும் போர்க்கோலம் தான்
>
>
> ச கம்பராமன்
> 10 06 13
>
>