Archive for July 2014
நெய்மாறன்
Posted July 11, 2014
on:- In: Humor | Language | Tamil | Translation | Uncategorized
- 8 Comments
நெய்மார் என்ற கால்பந்தாட்ட வீரர் பெயரை ஒருவர் ‘நெய்மாறன்’ என்று எழுதக் கண்டேன். வேடிக்கைக்குதான். ஆனால் ரசமான மாற்றம் அது.
சம்பந்தப்பட்ட நெய்மார் இதனை ஏற்பாரோ என்னவோ, ஆனால், நெய்மாறன் என்ற பெயர் நன்றாகவே உள்ளது. தமிழ் மரபுணர்ந்து செய்த சுவாரஸ்யமான மாற்றம்.
மாறன்: பாண்டியன், வேண்டுமானால் நெய் பூசிய வேலை ஏந்திய பாண்டியன் என்பதுபோல் இப்பெயருக்கு விளக்கம் அளிக்கலாம் 🙂
ஆனால் ஒன்று, இப்படி மாற்றுவது மரபு சார்ந்ததுதான். விபீஷணன் / லக்ஷ்மணன் ஆகியோர் வீடணன் / இலக்குவன் என்று மாறியது ஏனோ, அதே காரணம்தான் இதற்கும். நமக்கு வாசிக்க இலகுவான வகையில் மாற்றிப் பயன்படுத்துவது. (அதேசமயம், நெய்மார் என்பதே தமிழில் உச்சரிக்கும்வகையில் உள்ளதால், இந்தக் காரணம் இங்கே பொருந்தாது என்பதையும் சொல்லிவிடவேண்டும்.)
இன்னொரு விஷயம், சம்பந்தப்பட்ட நபருக்குத் தமிழ் தெரிந்து, அவர் இதனை ஏற்காவிட்டால் அவர் பெயரை மாற்றக்கூடாது என்பது என் கட்சி. அவர் தமிழில் எழுதுவதுபோல்தான் நாமும் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். உதா: எழுத்தாளர் சுஜாதா பெயரை சுசாதா என்று எழுதுவதை நான் ஏற்கவில்லை, not that it matters :))
சிலர் பெயர்களையும் மொழிபெயர்க்கிறார்கள். ’குமார்’ என்ற பெயரைத் தடாலென்று ‘செல்வன்’ என்று சொல்லிவிடுகிறார்கள். சம்பந்தப்பட்ட நபருக்குத் தூக்கிவாரிப் போடும் 🙂
ஆனால் இதுவும் மரபில் உள்ளதுதான். கம்பர் ராமாயணத்தைத் தமிழுக்குக் கொண்டுவரும்போது, பல வடமொழிப் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். உதாரணமாக: ருஷ்யசிருங்கர் என்ற முனிவர் பெயரைக் ‘கலைக் கோட்டு முனிவர்’ என்று அழகாக மாற்றுகிறார் அவர்.
***
என். சொக்கன் …
11 07 2014
தமிழ்க் கவிதை வரலாறு, ராஜாவழி
Posted July 6, 2014
on:- In: Ilayaraja | Music | Poetry | Uncategorized
- 5 Comments
இன்று (06 ஜூலை 2014) பெங்களூரில் நடைபெற்ற ராஜா ரசிகர் சந்திப்பில் இந்த Presentationனை வழங்கினேன்.
தலைப்பைக் கண்டு ஏமாந்துவிடவேண்டாம். இது தீவிர ஆய்வல்ல, சும்மா வேடிக்கைக்காக இந்தத் தலைப்பில் இருபத்துச் சொச்ச பாடல்களைத் தொகுத்து வழங்கினேன் அவ்வளவே 🙂