இசை எனும் கலை
Posted February 8, 2009
on:- In: Announcements | Art | Learning | Music | Uncategorized
- 4 Comments
நண்பர் நெப்போலியன் (http://www.neps.in) இணைய தளத்திலிருந்து ஒரு செய்தி.
நம் ஊரில் இசை ரசிகர்கள் நிறைய. ஆனால் இசை எனும் கலையை, அதன் நுணுக்கங்களை நாம் எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்பது கொஞ்சம் சந்தேகம்தான், ‘கேட்க நல்லா இருக்கு, அது போதும்’ என்கிற அளவில் என்னைப்போன்றோரின் இசை விருப்பங்கள் நின்றுவிடுகின்றன.
ரசிக்கவும் சரி, இசைக்கவும் சரி, அந்தக் கலைபற்றிய ஓர் அடிப்படைப் புரிதல் தேவைப்படுகிறது. ஆனால் அதை யார் நமக்குச் சொல்லித்தருவார்கள்? வெளிப்படையாகக் கேட்டால் மற்றவர்கள் சிரிப்பார்களோ, கேலி செய்வார்களோ என்கிற பயத்திலேயே பலர் வாய் திறப்பதில்லை.
இசைபற்றிய நமது கேள்விகள், சந்தேகங்களை அந்தத் துறை சார்ந்த நிபுணர் ஒருவரிடம் கேட்டுத் தெளிவுபெறுவதற்கு நண்பர் நெப்போலியன் ஒரு வாய்ப்புத் தருகிறார். மேல் விவரங்கள் இங்கே:
http://neps.in/2009/01/01/learning-art-of-music-howto-questions-invited/
***
என். சொக்கன் …
08 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
4 Responses to "இசை எனும் கலை"
சொக்கன்,
உண்மைதான். ஆயினும், இனிய கர்நாடக சங்கீதம் பொதுமக்களிடம் இருந்து அந்நியமாக இருக்கக் காரணமே அதை ரசிப்பவர்கள் ராகங்களை தெரிந்தவர்களாக இருக்கவேண்டும் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியிருப்பதுதான் என்று நினைக்கிறேன்.
1 | R Sathyamurthy
February 14, 2009 at 9:17 pm
இசையை இசையாக மட்டும் ரசிக்க ராகங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள தேவையில்லை என்பது என் கருத்து.
ஒரு மென்பொருள் உபயோகிக்கும்போது, அதை உபயோகிக்க கற்கிறோமேயன்றி, அதை செய்யும் விதம் பற்றி அறிய முற்படுவதில்லையே நாம். அதை தயாரிக்கையில் பல நிபுணத்துவங்கள் அதில் உபயோகம் ஆகியிருக்கும் அல்லவா?
நாம் முதன்முதலில் சங்கீதம் கேட்க துவங்கியபோது என்ன புரிதல், அடிப்படையாகக்கூட, நம்மிடம் இருந்திருக்கும்?