46 Responses to "கைதட்டல்கள்"
Sir, Same Experience I got in Bangalore-JeevanBeemaNagar -Malabar Res – Hotel. When I praised the Hotel owner for making different interiors he himself started serving us and treating like friend. Next time,the other serving agents also felt like Owner’s pet and served as good 🙂
Praise is like a salt, if you add properly in proper place, it will add more to taste. but if missed, it will spoil whole cooking!
“Feedback தருவது, பாராட்டுவதுகூட ஒரு கலைதான். இதற்குத் தனிப்பட்ட திறமையைவிட, மனசுதான் வேண்டும். அது பலருக்கு அமைவதில்லை.” – 100% உண்மை.
பி.கு. பணிப்பெண் பெயர் படித்ததும் ஒரு இன்பமான ஆச்சர்யம். அதே பெயரில் எனக்கு ஒரு தோழி – அவர் இப்போது அமெரிக்காவில் மருத்துவர்.
//இணையத்தில்மட்டுமென்ன? ஒரு பதிவு எழுதி ‘Publish’ பொத்தானை அமுக்கிய இரண்டாவது நிமிடத்திலிருந்து, யாராவது feedback அனுப்பமாட்டார்களா என்று மெயில்பாக்ஸைத் தேட ஆரம்பித்துவிடுகிறோம்//
You too…I’m doing the same thing for my first post…but not that much traffic 🙂
Nice post, I like it very much. Most of the things are happening in everyone’s life and I’m sure everyone would have had “Autograph” movie effect.
Praising is infectious too and it has to be a true expression unlike false adulation.
so, asusual this post is rocking.
சூப்பர் கதை பிரகாஷ் 🙂
சொக்கன் சார்… அருமையான பதிவு .ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. இனிமேல் ஒற்றை வரியில் தேங்க்ஸ் மட்டும் சொல்லாமல் கண்டிப்பா கொஞ்சம் கூச்சத்தை விட்டுட்டு கரெக்டா feedback சொல்லி விடுகிறேன்.
நான் இப்படி நினைக்கிறேன். இதே ரீனா தாமஸ் வீட்லயும் இப்படி இருப்பாங்களா?
நல்ல பதிவு…நிஜம் தான் ஊக்கமும் பாரட்டும் தான் மனிதனை மேலும் மேலும் வளர உதவுகின்றது….
good post.
//Feedback தருவது, பாராட்டுவதுகூட ஒரு கலைதான். இதற்குத் தனிப்பட்ட திறமையைவிட, மனசுதான் வேண்டும். அது பலருக்கு அமைவதில்லை.// – உண்மை
கலக்கல் பதிவு தல….இங்க (வேலையில்) முக்கியமாக தேவைப்படும் விஷயத்தில் இதுவும் ஒன்று.
பெருசாக இருந்தாலும் நல்ல நடை. ஆமா அந்த பெரிய மனதுக்காரர் உண்மையிலேயே ஒரு படத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார் 😉
அதுவும் அவரே படித்து கட்டியது தான் ஸ்பெசல்.;)
இவ்வளவு பெரிய பதிவு சலிக்கவே இல்லை. அருமையான Free Flow நடை. இரண்டுக்குமே காரணம் அந்த இன்சிடன்ட் தந்த தாக்கம்தான் என்று நினைக்கிறேன். பிரகாஷ் சொன்ன சம்பவமும் அருமை. படித்து முடித்த பின் ஜோரா ஒரு முறை கை தட்டினேன். உங்க காதில் கேட்டதா? 🙂
நல்ல ‘appreciation’ கெடைச்சா கால் வலி எல்லாம் சரி ஆகிடும்..உங்க கால் வலி எப்பட இருக்கு 🙂
உமக்கு ஏர்ஹோஸ்டஸ் மசாஜ் பண்ணி விட்டதை வெளியில் சொல்ல தைரியம் இல்லாமல் இப்படி பக்கத்து சீட்காரருக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை வன்முறையாகக் கண்ணடிக்கிறோம்!!
🙂 நல்ல பதிவு சொக்கன்.
உங்களிடம் பிடித்தது நீங்கள் பார்க்கும் பாஸிடிவ் பார்வைதான். இந்த மாதிரி சம்பவங்கள் படிக்கும்போது நல்ல புத்துணர்ச்சியைத் தருகின்றன.
நீண்ட இரவு நேர பஸ் பயணத்தை முடித்து இறங்கும்போது ஓட்டுநரிடம் சற்றே நின்று கைகொடுத்து ‘தேங்க்ஸ் ஸார். நல்லபடியா ஓட்டிட்டு வந்திட்டீங்க’ன்னு ஒருவாட்டியாவது சொல்லனும்னு நினைப்பேன். ஏனோ ஒரு தயக்கம்… 🙂
லோக்கல் பஸ்ஸில் ஒரு முறை போய்க்கொண்டிருக்கும்போது கூட்டத்தில் உட்கார இடம் கிடைத்து சௌகரியமாக போய்க் கொண்டிருக்கும்போது கைக்குழந்தையோடு ஏறிய பெண்ணுக்கு இடம் கொடுக்க நினைத்து, ஆரம்ப தயக்கத்தை வெற்றிகரமாக ஜெயித்து அவர்களுக்கு இடமும் கொடுத்தேன். சட்டென்று பின்புறத்திலிருந்து ஒரு பெரியவர் தோளைத் தட்டி ‘குட் கெஸ்ட்சர். ஐ லைக் இட்’ என்று சத்தமாக எல்லாரும் கேட்கச் சொன்னார். சந்தோஷத்தை விட வெட்கம்தான் அதிகம் வந்தது. அடுத்த ஸ்டாப்பில் இறங்கி நடந்தே வீட்டுக்குப் போய்விட்டேன். மனதின் ஓரத்தில் கொஞ்சமே கொஞ்சம் பெருமையாடு :))
//மோகன் மீசை// ரசித்தேன்.
good nalla pathivu
///அவருடைய பதற்றத்தைப் பார்த்தால் விமானத்தைக் கடத்த நினைத்து மறந்துபோய் தூங்கிவிட்டவரைப்போல் தெரிந்தது.//
//அவர் படிக்கப் படிக்க, ரீனா தாமஸ் முகத்தில் பரவிய சிவப்பை வார்த்தைகளில் வர்ணிப்பது சிரமம். அவர் தினம் தினம் வானத்தில் பறந்து சென்றாலும், நிஜமான மிதப்பை அப்போதுதான் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.//
ரொம்ப நல்ல பதிவு அப்படின்னு மனசு விட்டுப் பாராட்டிக்கிறேன்.
ஆனா இந்த பாராட்டையெல்லாம் இடம் பொருள் ஏவல் பார்த்து கரெக்டா செய்யணும். உதாரணத்துக்கு எதிர் வீட்டு மாமி கொடுத்த எண்ணெய்க் கத்திரிக்காய் குழம்பை “சூப்பர்” என்று என் மனைவி எதிரிலேயே பாராட்டியதில் “நான் சமைக்கறது நல்லாருக்குன்னு ஒரு நாளாவது சொல்லிருக்கீங்களா? பக்கத்து வீட்ல சுடு தண்ணீர் போட்டுக் குடுத்தா கூட சூப்பர்ங்கறீங்க” என்று அப்புறமாய் ஷொட்டு விழுந்தது.
இந்த கமெண்ட் நல்லாருக்குன்னு பாராட்டினீங்கன்னா அடிக்கடி வந்து நிறைய கமெண்ட் போடுவேன். ஹிஹி!
Dear Mr.Chokkan,
It’s really good post.To praise the people for their good things is really appreciable.Then their work will become better.Your post once again tells me that,every experience is a lesson.
மிகவும் நல்ல பதிவு, நெகிழ வைக்கிறது.
வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு!
திருப்பூரில் இன்னும் பெரிய தனவந்தர்கள் வீட்டுத் திருமணங்களில், நீங்கள் சொல்லும் கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது 😦
மிகவும் நல்ல பதிவு சொக்கன்.
வாழ்த்துக்கள்.
Siva
சூப்பர் பதிவு.
‘தேங்க்ஸ’ சொல்வது கூட ஒரு மந்திர சொல் . அதை பெற்றுக்கொள்ளும் கடைகாரரோ, ஆட்டோ ஓட்டுனரோ, லிப்ட் இயக்குனரோ, யாராஇருந்தாலும் முகம் மலர்ந்து போகிறார்கள்.
மகிழ்ச்சியான தருணங்கள.
உங்கள் பதிவுகள் சுவாரசியமானவை. நன்றி.
Nice to see your blog thala , hope u remember me 🙂
i ll follow your blog hereafter
please write abt our thala sujatha when u have time , or if you have already wriiten abt him pls give me the link
thanks
அந்த விமானப் பணிப்பெண்ணுக்கு அளித்த பாராட்டினை கேட்டு அவர் ஆனந்தக் கண்ணீர் விட்டாரோ (கண்டிப்பாக விட்டிருப்பார்) இல்லையோ படித்த எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வந்திருக்கும் (எனக்கு அதிகமாகவே வந்தது) என்பது சர்வ நிச்சயம். மிக நல்ல பதிவை படித்த திருப்தி.
ரேகா ராகவன்
நல்லதோ கெட்டதோ நேரடியாக சொல்லிவிடுவது உத்தமம். சம்பந்தப்பட்டவர்களுக்கு மன வருத்தம் இருக்காது. குத்தி காட்டுகிறீர்கள் என்று சொல்ல தோன்றாது. அன்றோடு அது மறந்து விடும். ஒரு தெளிவு இருக்கும்.
நீங்கள் எடுக்கும் ட்ரெயினிங்கில் சந்தோசப்பட்டவர்கள், மேலும் நீங்கள் நல்ல முறையில் க்ளாஸ் எடுக்கணும் என்று சொல்ல – ஐந்திற்கு நான்கு கொடுக்கலாம். சிலர் எப்படியும் இது ஓர் டுபாகூர் பீட்பேக் என்று ஐந்தோ அல்லது ஒன்று கொடுக்கலாம், ரெகுலர் அப்பரைசல் மாதிரி.
என் மனைவியின் நண்பி ஒருவர், கொடுத்த “கொங்கனி ஒப்பிட்டு” உப்புமா கிச்சடி நன்றாக இருந்தது என்று நான் ஒரு முறை சொன்னதை கேட்டு, ஒவ்வொரு முறையும் அவர்கள் செய்யும் போது ஒரு டிப்பன் பாக்ஸ் வீட்டிற்கு வருகிறது! திரும்பவும், அன்றைய டிப்பன், எங்கள் வீட்டிலிருந்து போவது வேறு விஷயம். கடைசியாக சென்றது ஒரு பிஸ்கட் பாக்கட். பீட்பேக்மகிமை.
சில சமயம் உணர்த்துதல், வேறு விதமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடும்!
நான் அமேரிக்காவில் இருந்த சமயம் ஒரு முறை நண்பர் எனக்கு கொஞ்சம் நாணயம் அனுப்பு என்பதை நான் தவறாக பணம் கேட்கிறார் என்று எடுத்துக்கொண்டு, அமெரிக்க நோட்டுக்கள் சிலவற்றை அனுப்ப, அவர் எதிர்பார்த்தநூமிச்மேடிசம் கலெக்சன் இல்லாமல் போனது வருத்தம் கொடுத்தது!
உங்களுக்கு போட்டியா … வந்திருக்கிற மறுமொழிகளும் (ப்ரகாஷ்,ஸ்ரீதர்,இலவசம், சித்தன்,விஜய்சங்கர்….) அழகான, உணர்ச்சிகரமான பதிவுகள்!
அழகான சிறுகதைனுகூட வைச்சிக்கலாம்..!
//12 | ila
நான் இப்படி நினைக்கிறேன். இதே ரீனா தாமஸ் வீட்லயும் இப்படி இருப்பாங்களா?//
எல்லாம் நம்ம கையில்தான் இருக்கிறது. வீட்டிலேயும் சரியான பாராட்டு கிடைத்தால் இது என்ன? இதை விட அதிகமாகவே செய்வாங்க.
எந்த மனிதனுக்கும் கைத்தட்டலும், முதுகுத் தட்டலும் அதிக உற்சாகம் கொடுக்கும். இன்னும், இன்னும் சாதிக்க வேண்டும் என்கிற ஆவலை ஏற்படுத்தும்.
இதை பலரும் புரிந்து கொள்வதில்லை. ”ஹவ் டு வின் ப்ரெண்ட்ஸ் அண்ட் இன்ப்ளுயன்ஸ் பீபுள்” சுய முன்னேற்ற புத்தகத்தில் இதற்காக ஒரு அத்தியாயாமே இருக்கிறது.
என்னை பொறுத்தவரையில், அலுவலகத்திலோ, வீட்டிலோ பாராட்டு உடனே கொடுத்து அவர்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும் வகையில் ஏதாவது செய்துவிடுவேன். (உங்களுக்கு இன்று அனுப்பிய மின்னஞ்சலும் அதற்கு நீங்கள் உடனே அளித்த பதில் பாராட்டும் அதில் ஒரு வகை).
நீங்கள் சொன்ன விஷயத்தில் மிகவும் முக்கியமானது அந்த சக பிரயாணி தன் பின்னோட்டத்தை அந்த பணிப்பெண்ணுக்கு படித்துக் காட்டியது. கண் காணாத அந்த நபரை வியக்கிறேன். அவர் என்ன வேலையில் இருந்தாலும் கண்டிப்பாக ஜெயித்துக் கொண்டிருப்பார், தன்னுடன் பணியாற்றுபவர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பார்.
(நீங்கள் ஏன் அவரை பார்த்து “சார் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா” என்று கேட்டிருக்கக் கூடாது? அதுதான் நோக்கியா எண்-97 வைத்திருக்கிறீர்களே? கூடவே அந்த பணிப்பெண்ணையும்தான் – ஹி ஹி)
சரி, இது எல்லாம் நடந்தது விமானத்தில் பொருளாதார பகுதியிலா, வணிகப்பகுதியிலா?
வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!
//அவர் படிக்கப் படிக்க, ரீனா தாமஸ் முகத்தில் பரவிய சிவப்பை வார்த்தைகளில் வர்ணிப்பது சிரமம். அவர் தினம் தினம் வானத்தில் பறந்து சென்றாலும், நிஜமான மிதப்பை அப்போதுதான் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.//
🙂 🙂 அதிகம் ரசித்தேன் 🙂 🙂
அது சரி
உங்களுக்கு எப்படி கைதட்டனும் 🙂 🙂
டிவிட்டரிலும் சொல்லிவிடுகிறேன்
மரு.புருனோவும் நியோ தமிழனும் ட்வீட்டியிருந்தார்கள். அவர்களால் ஈர்க்கப்பட்டு பதிவினை வாசித்தேன். அவர்களுக்கும், எழுதிய சொக்கனுக்கும் நன்றிகள். கொஞ்சம் வழக்கமான சுய-முன்னேற்றக்கட்டுரை பாணியிலிருந்தாலும், பாயிண்ட் டேக்கன். ஹேட்ஸ் ஆஃப்.
நல்ல பதிவு.
//நீங்கள் ஏன் அவரை பார்த்து “சார் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா” என்று கேட்டிருக்கக் கூடாது?//
//கேட்கலாம்தான். ஆனால் கேமெராவுக்காக மொபைலை On செய்யணுமே, அது சட்டப்படி தப்பு 🙂 (In india, using mobile phone in “Flight Mode” inside an aircraft is NOT legal)//
நான் சொன்னது ப்ளைட் தரையிறங்கிய பின்னால். (ரீனா) நெனைப்புதான் பொழப்ப கெடுக்குது.
அட்டகாசமான பதிவு!
நல்ல பதிவு
1 | anbudan_BALA
August 24, 2009 at 5:24 pm
Junior,
Great to read this, thanks for sharing.
பாராட்டு என்பது பெரிய டானிக் மாதிரி, அதே மாதிரி தான் நன்றி நவில்தலும், ஒருவர் தன் வண்டியில் லிப்ட் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், இறங்கும்போது, முகமலர்ச்சியுடன் தாராளமாக நாம் நன்றி கூறினால், அந்த நபர் மறுபடியும் இன்னொரு ஆசாமிக்கு லிப்ட் கொடுக்கத் தயங்கவே மாட்டார், இல்லையா ?
எ.அ.பாலா